Friday, December 12, 2014

தே.பொருட்கள்:
கத்திரிக்காய் - 1 பெரியது
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த தக்காளி - 1
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 2
பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை - சிறிதளவு
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது

செய்முறை:
*கத்திரிக்காயில் எண்ணெய் தடவி காஸடுப்பில் சுட்டெடுக்கவும்.

*ஆறியதும் தோலை எடுத்துவிட்டு மசித்துக்கொள்ளவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+பச்சை மிளகாய்+தனியாத்தூள்+மஞ்சள்தூள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கவும்.

*வதங்கியதும் மசித்த கத்திரிக்காயை சேர்த்து நன்கு கிளறி 1/2 கப் நீர் விட்டு கொதிக்கவிடவும்.

*கொதித்து திக்காக வரும் போது மல்லித்தழை தூவி இறக்கவும்.

*சப்பாத்தி,தோசையுடன் சாப்பிட நன்றாகயிருக்கும்.