Monday, March 31, 2014

தே.பொருட்கள்

சுத்தம் செய்த நண்டு - 7
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் =தேவைக்கு

அரைக்க

தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
பெருஞ்சீரகம் -1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
கரம்மசாலா - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -7

செய்முறை
*காய்ந்த மிளகாயை சிறிது நேரம் வெந்நீரில் ஊறவைத்து நைசாக அரைக்கவும்.தேங்காய்த்துறுவல்+கசகசா+பெருஞ்சீரகம்+கரம்மசாலா இவற்றையும் விழுதாக அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வெங்காயம்+தக்காளி+இஞ்சி பூண்டு விழுது+காய்ந்த மிளகாய் விழுது என் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

*பின் மஞ்சள்தூள்+உப்பு+நண்டு சேர்த்து வதக்கி தேவையானளவு நீர் சேர்த்து வேகவிடவும்.

*நண்டு வெந்ததும் தேங்காய் மசாலா சேர்த்து கிளறி மேலும் 5 நிமிடங்கள் வரை வதக்கி இறக்கவும்.

பி.கு

*நண்டு சீக்கிரம் வெந்துவிடும் அதனால் குறைவான நீர் சேர்த்து மூடி போட்டு வேகவிடவும்.

*எப்போழுதும் நண்டை சமைக்கும் நேரத்தில்தான் சுத்தம் செய்து சமைக்கவேண்டும்.முன்பே சுத்தம் செய்துவிட்டால் நண்டின் சுவையே மாறிவிடும்.

*இதில் காய்ந்த மிளகாய் பதில் வரமிளகாய்த்தூள் 1 டேபிள்ஸ்பூன் சேர்க்கலாம்.



 

Monday, March 24, 2014

 Recipe Source : Muthisidharal
தே.பொருட்கள்
அரிசி  - 2 கப்
அரிந்த சின்ன வெங்காயம் - 1 கப்
பூண்டுப்பல் - 2 டேபிள்ஸ்பூன்
முருங்கைகீரை - 1 கப்
முருங்கைகாய் - 3
நீளமாகவும் மெலிதாக அரிந்த பிஞ்சு கத்திரிக்காய் - 2 கப்
அரிந்த தக்காளி -2 கப்
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 4 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

எண்ணெயில் வறுத்து பொடிக்க
தனியா+கடலைப்பருப்பு+சோம்பு - தலா 1 டீஸ்பூன்
கசகசா+மிளகு -தலா 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -5
பட்டை+கிராம்பு -தலா 1

செய்முறை

*அரிசியை கழுவி சிரிது நெய்யில் வறுத்து உப்பு+4 கப் நீர் சேர்த்து புலவு போல் செய்து கொள்ளவும்.

*கடாயில் எண்ணெய் +2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு சீரகம்  சேர்த்து தாளித்து சின்ன வெங்காயம்+பூண்டு+தக்காளி+முருங்கைகீரை+கத்திரிக்காய்+துண்டுகளாகிய முருங்கைக்காய்+கரிவேப்பிலை+மஞ்சள்தூள் என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து சிறுதீயில் சமைக்கவும்.

*முருங்கைக்காய் வெந்ததும் மசாலா கெட்டியாகி என்ணெய் மேலே மிதந்து வரும் போது பொடித்த பொடி +மீதமிருக்கும் நெய் சேர்த்து வதக்கவும்.

*இந்த கலவையில் சாதத்தை சேர்த்து சிறுதீயில் கிளறி இறக்கவும்.

*சுவையான இந்த சாதத்துக்கு உருளை வறுவல்+அப்பளம்+ஊறுகாய்  சூப்பர் காம்பினேஷன்.