Friday, April 30, 2010

தே.பொருட்கள்:

மைதாமாவு - 3 கப்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
தயிர் - 1/4 கப்
பட்டர் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

ஸ்டப்பிங் செய்ய:
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன்
துருவிய பனீர் - 1 கப்
 
செய்முறை :
*மாவில் தேவையான உப்பு சேர்த்து சர்க்கரை+பட்டர்+தயிர்+எண்ணெய் சேர்த்து மிருதுவாக பிசையவும்.தேவைப்பட்டால் மட்டும் சிறிது தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்க்கு பிசைந்து ஈரமான துணிபோட்டு மூடி 1 மணிநேரம் வைக்கவும்.

*ஸ்டப்பிங் செய்ய கொடுத்துள்ள பொருட்களை தேவையான உப்பு சேர்த்து ஒன்றாக கலக்கவும்.

*பிசைந்த மாவில் சிறு உருண்டையாக எடுத்து உருட்டி அதனுள் ஸ்டப்பிங் கலவையை வைத்து மறுபடியும் மூடி லேசாக உருட்டு கட்டையில் தேய்க்கவும்.

*ஸ்டப்பிங் எல்லா இடத்திலும் இருக்குமாறு தேய்க்கவும்.

*தேய்த்த குல்சாவை நான் ஸ்டிக் கடாயில் போட்டு 2புறமும் சிவக்கவிட்டு எடுக்கவும்.தேவைப்பட்டால் இருபுறமும் நெய் தடவி சுட்டு எடுக்கலாம்.

*மிகவும் அருமையாக இருக்கும்.2 குல்சா மேல் சாப்பிடமுடியாது.விருப்பமான சைட் டிஷுடன் சாப்பிடவேண்டியதுதான்..

Wednesday, April 28, 2010

இந்த ரெசிபியை Sailu's food வெப்சைட்டில் பார்த்து செய்தேன்.இட்லி,தோசை,சாதம் அனைத்திற்க்கும் பொருத்தமான ஜோடி....அவங்க கொடுத்திருக்கும் அளவுகளை மட்டும் குறைத்து போட்டுள்ளேன்...
 
தே.பொருட்கள்:
தக்காளி - 5 பெரியது
புளி - 1 நெல்லிக்காயளவு
வரமிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
வெந்தயப்பொடி - 1/2 டீஸ்பூன்
உப்பு + எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன் குறைவாக
கறிவேப்பிலை - சிறிது
கா.மிளகாய் - 2
நசுக்கிய பூண்டுப்பல் - 6
 
செய்முறை :
*தக்காளியை நறுக்கி கொள்ளவும்.கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய தக்காளியை சேர்த்து மிதமான தீயில் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.இதற்கு மட்டும் கொஞ்சம் பொறுமை வேணும்.தக்காளியிலிருந்து எண்ணெய் பிரிந்து வர 45 நிமிஷமாவது ஆகும்.

*அப்போதே அதனுடன் புளியையும் சேர்த்து மூடி அடுப்பிலிருந்து இறக்கி மூடிவிடவும்.ஆறியதும் தக்காளியை உப்பு சேர்த்து விழுதாக அரைத்து ஒரு பவுலில் வைக்கவும்.

*அதனுடன் மிளகாய்த்தூள்+வெந்தயப்பொடி சேர்த்து கலந்து வைக்கவும்.

*தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து ஆறவைத்து அரைத்த விழுதில் கலக்கவும்.

*ஆறவைத்து பிரிட்ஜில் தேவையானது பயன்படுத்தவும்.
 
பி.கு:
தக்காளியின் புளிப்பிற்கேற்ப புளி சேர்க்கவும்.புளிப்புள்ள தக்காளியாக இருந்தால் நன்றாகயிருக்கும்.

Tuesday, April 27, 2010

தே.பொருட்கள்:

ஆல் பர்பஸ் மாவு - 1 1/2 கப்
ப்ரவுன் சுகர் - 3/4 கப்
பேக்கிங் பவுடர் - 1/4 டீஸ்பூன்
கினோவா - 1/2 கப்
ஒட்ஸ் - மேலே தூவ
வெஜிடபிள் எண்ணெய் - 1/2 கப்
பொடியாக நறுக்கிய பைனாப்பிள் துண்டுகள் - 1/2 கப்
பைனாப்பிள் எசன்ஸ் - 1 டீஸ்பூன்
(அ)
பைனாப்பிள் ஜூஸ் - 1/4 கப்
உப்பு - தேவைக்கு
 
செய்முறை :

* ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் நீர்விட்டு சிறிது உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு,கினோவாவை வேகவைத்து எடுக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் மைதா மாவு+உப்பு 1 சிட்டிகை+பேக்கிங் பவுடர்+வேகவைத்த கினோவா கலந்து வைக்கவும்.

*இன்னொரு பவுலில் எண்ணெய் + சுகர் சேர்த்து கரையும் வரை கலக்கவும்.சர்க்கரை கரைந்ததும் எசன்ஸ்(அ)ஜூஸ் சேர்த்து கலக்கவும்.

*சிறிது சிறிதாக மைதா கலவையை நன்கு கலக்கவும்.பின் பைனாப்பிள் துண்டுகள் சேர்த்து கலக்கி கேக் பாத்திரத்தில் பட்டர் தடவி ஊற்றவும்.அதன் மேல் ஒட்ஸைனை தூவி விடவும்.

*180 C° அவனை முற்சூடு செய்து 40 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

*பைனாப்பிள் வாசனையோடு ப்ரெட் சூப்பராகயிருக்கும்...

Monday, April 26, 2010

தே.பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்
புழுங்கலரிசி - 1 கப்
ஜவ்வரிசி - 1 டேபிள்ஸ்பூன்
சாதம் - 1/4 கப்
தேங்காய் உடைத்த நீர் - 1/2 கப்
தேங்காய்த்துறுவல் - 1/4 +1/4கப்
வெல்லம் - 1/2 கப்
பாசிபருப்பு - 1/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
 
செய்முறை :

*அரிசி வகைகள்+ஜவ்வரிசி இவைகளை 2 மணிநேரம் ஊறவைத்து சாதம்+தேங்காய் உடைத்த நீர்+தேங்காய்த்துறுவல் சேர்த்து நன்கு மைய கெட்டியாக அரைக்கவும்.

*மாவை உப்பு சேர்த்து கரைத்து 8 மணிநேஅர்ம் புளிக்கவிடவும்.
*மாவை உபயோகப்படுத்தும் நேரத்தில் பாசிப்பருப்பை வெறும் கடாயில் லேசாக வறுத்து வைக்கவும்.

*வெல்லத்தை சிறிது நீர் விட்டு காய்ச்சி மண்ணில்லாமல் வடிகட்டி புளித்த மாவில் கலக்கவும்.ஏலக்காய்த்தூளை மாவில் கலக்கவும்.

*இட்லித்தட்டில் ஒரு கரண்டி மாவை ஊற்றி அதன்மேல் வறுத்த பாசிப்பருப்பு+தேங்காய்துறுவல் சேர்க்கவும்.இப்படியே அனைத்தையும் செய்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

Sending this recipe CWS - Cardamon seeds hosted by Priya

Saturday, April 24, 2010


கினோவா(Quinoa) ஒட்ஸ்,பார்லி மாதிரி இதுவும் ஒரு வகை தானியம்.இதனைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இங்கே பார்க்கவும்.
 
தே.பொருட்கள்:

கேழ்வரகு மாவு - 1 கப்
கினோவா(Quinoa) - 1 கப்
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 1
பட்டர்(அறை வெப்பநிலையில்) - 1/2 கப்
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகு,சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்
எள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
தயிர் - 3 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
கினோவா தானியத்தின் படம்
செய்முறை :
*கினோவாவை வெறும் கடாயில் வாசனை வறும் வரை வறுக்கவும்.ஆறியதும் அதனுடன் மிளகு,சீரகத்தை சேர்த்து மிக்ஸியில் மாவாக்கவும்.

*ராகியையும் ,கினோவா மாவையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் பட்டரை போட்டு நன்கு கைகளால் மிருதுவாக பிசையவும்.அதனுடன் அரிந்த ப.மிளகாய்+கறிவேப்பிலை+எள்+பெருங்காயத்தூள்+உப்பு அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.

*பின் சிறிது சிறிதாக ராகி+கினோவா மாவுகளை சேர்க்கவும்.தேவையெனில் மட்டும்,மாவு சப்பாத்தி மாவு பதத்திற்க்கு வர தயிர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.

*பிசைந்த மாவினை சிறு உருண்டைகளாக உருட்டி உள்ளங்கையில் வைத்து லேசாக அழுத்தவும் அல்லது குக்கீ கட்டரை வைத்து உபயோகப்படுத்தவும்.

*அவன் டிரேயில் அலுமினியம் பேப்பர் வத்து குக்கீஸ்களை இடைவெளிவைத்து அடுக்கவும்.

*180 டிகிரிக்கு முற்சூடு செய்த அவனில் 20-25 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

பி.கு:
*வெளியில் எடுக்கும் போது வேகாத மாதிரி இருக்கும் ஆறியதும் வெந்து இருக்கும்.

*பேக் செய்யும் போது வாசனை கமகமன்னு இருக்கும்.

Friday, April 23, 2010

தே.பொருட்கள்:
துருவிய மரவள்ளிக்கிழங்கு - 2 கப்
தேங்காய்த்துறுவல் - 1/2 கப்
சர்க்கரை - 3/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
 
செய்முறை :
*துருவிய மரவள்ளிகிழங்கை ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

*வெந்ததும் எடுத்து இளஞ்சூடாக இருக்கும் போது அதனுடன் மேற்கூறிய பொருட்களை ஒன்றாக கலந்து பரிமாறவும்.

Wednesday, April 21, 2010

நான் இருக்கும் இடத்தில் ப்ரெட் கடைகள் தூரம்.அதனால் இந்த ப்ரெட் ரெசிபியை கூகிளாண்டவரிடம் தேடி பார்த்து செய்த ரெசிபி.முதல் முயற்சியில் நன்றாக வந்ததில் ரொம்ப சந்தோஷம் எனக்கு.
 
தே.பொருட்கள்:

கோதுமை மாவு - 2 கப்
ஈஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்
வெதுவெதுப்பான பால் - 1/4 கப்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
மைதாமாவு - மேலே தூவ
உப்பு - தேவைக்கு
 
செய்முறை :

*கோதுமை மாவில் உப்பு+சர்க்கரையைக் கலக்கவும்.சிறிது வெதுவெதுப்பான நீரில் ஈஸ்டைக் கலக்கி 5 நிமிடம் வைத்தால் பொங்கி வரும்.

*மாவில் பால்+ஈஸ்ட் நீர் கலந்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும்.அதை ஒரு ஈரமான மெல்லியதுணியில் 2 மணிநேரம் மூடி வெப்பமான இடத்தில் வைக்கவும்.

*2 மணிநேரம் கழித்து 2 மடங்காக மாவு உப்பி இருக்கும்.மறுபடியும் நன்கு மிருதுவாக பிசைந்து ஈரத்துணியில் மூடி 1 மணிநேரம் வைக்கவும்.

* 1 மணிநேரம் கழித்து அவனை 190 டிகிரிக்கு முற்சூடு செய்யவும்.

*கேக் செய்யும் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி மாவை வைத்து கையால் வட்டமாக தட்டி மைதாவை மேலே தூவி 15 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

*சுவையான ப்ரெட் ரெடி.

Tuesday, April 20, 2010

தே.பொருட்கள்:

பாஸ்மதி - 2 கப்
முளைக்கட்டிய சென்னா,பச்சைபயறு - தலா 1/4 கப்
முளைகட்டிய வெந்தயம் - 1 டேபிள்ஸ்பூன்
நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த தக்காளி - 1
கீறிய பச்சை மிளகாய் - 4
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்பால் - 1 கப்
பட்டர் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு + எண்ணெய் = தேவைக்கு
 
தாளிக்க:
பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 2
 
செய்முறை :
*பாஸ்மதியைக் கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும்.

*குக்கரில் பட்டர்+எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+இஞ்சிப்பூண்டு விழுது+பச்சை மிளகாய்+மஞ்சள்தூள்+முளைகட்டிய சென்னா,வெந்தயம்,பச்சைபயறு அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கவும்.

*வதங்கியதும் உப்பு+அரிசி+தேங்காய்ப்பால்+2 கப் நீர் சேர்த்து 3 விசில் வரை வேக்கவும்.

*ஆறியதும் ராய்த்தா (அ) வறுவலுடன் பரிமாறவும்.

Monday, April 19, 2010

தே.பொருட்கள்:

பஜ்ஜி மிளகாய் - 5
துருவிய சீஸ் -1/4 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - 1
துருவிய கேரட்,கோஸ்,காலிபிளவர் - 1/4 கப்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
கடலை மாவு - 1/4 கப்
அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை :
*மிளகாயை நடுவில் கீறி உள்ளிருக்கும் விதைகளை நீக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கி பின் துருவிய காய்களை சேர்த்து நன்கு வதக்கவும்.பின் உருளைகிழங்கை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

*கடலை மாவு+அரிசி மாவு+உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்க்கு கரைக்கவும்.

*மிளகாயில் சீஸ் துருவலை வைத்து அதனுள் உருளைக்கலவையை வைத்து அதன் மேல் மேலும் சீஸ்துருவலை வைத்து மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Sunday, April 18, 2010

தே.பொருட்கள்:
பால் - 4 கப்
ஒட்ஸ் - 1 கப்
சர்க்கரை - 3/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
முந்திரி,திராட்சை - தேவைக்கு
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
 
செய்முறை :
*கடாயில் பாதி நெய் விட்டு ஒட்ஸினை லேசாக வறுக்கவும்.மீதமுள்ள நெய்யில் முந்திரி,திராட்சையினை வறுத்து தனியாக வைக்கவும்.

*4 கப் பாலை 2 கப் பாலாக வரும் வரை நன்கு சுண்டக்காய்ச்சவும்.

*கொதித்துக் கொண்டிருக்கும் பாலில் சர்க்கரை+ஒட்ஸினை சேர்த்து நன்கு கலக்கவும்.

*அடுப்பிலிருந்து இறக்கி ஏலக்காய்த்தூள்+முந்திரி,திராட்சையினை சேர்த்து சூடாகவோ அல்லது சில்லுன்னு பரிமாறவும்.

*இந்த பாயசம் ஈஸியாக செய்வது மட்டுமில்லாமல் சுவையும் பிரமாதமாக இருக்கும்.

Saturday, April 17, 2010

தே.பொருட்கள்:

டோஃபு - 200 கிராம்
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு +எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை :
*சோயா பனீரை தேவையான வடிவில் மெலிதாக நறுக்கவும்.

*அதில் எண்ணெய் நீங்கலாக அனைத்தையும் கலந்து 1/2 மணிநேரம் ப்ரிட்ஜில் வைக்கவும்.

*பின் எண்ணெயில் இருபக்கமும் சிவக்க வறுத்தெடுக்கவும்.

Thursday, April 15, 2010

தே.பொருட்கள்:

பொடியாக நறுக்கிய பெரிய கத்திரிக்காய் - 1
உதிராக வடித்த சாதம் - 3 கப்
நீள வாக்கில் அரிந்த வெங்காயம் - 1
கீறிய பச்சை மிளகாய் - 2
முந்திரி -தேவைக்கு
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

எண்ணெயில் வறுத்து பொடிக்க:

தனியா - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
எள் -1/2 டீஸ்பூன்
தேங்காய்த் துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

கிராம்பு - 3
பிரியாணி இலை - 3
முளைக்கட்டிய வெந்தயம் - 1/2 டேபிள்ஸ்பூன்

செய்முறை :

*பொடிக்க கொடுத்துள்ளவைகளை நைசாக பொடிக்கவும்.

*கடாயில் நெய் விட்டு முந்திரியை வறுத்து வைக்கவும்.அதே கடாயில் மீதமுள்ள நெய்+எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளிக்கவும்.

*பின் வெங்காயம்+பச்சை மிளகாய்+கத்திரிக்காய்+உப்பு அனைத்தையும் நன்கு எண்ணெயிலேயே வதக்கவும்.தண்ணீர் ஊற்றக்கூடாது.

*அனைத்தும் நன்கு வதங்கியதும் பொடித்து பொடியைத் தூவி நன்கு வதக்கி ஆறவைக்கவும்.

*ஆறியதும் சாதம் சேர்த்து நன்கு கிளறி முந்திரி சேர்த்து பரிமாறவும்.

Wednesday, April 14, 2010

மசாலா டீ

0
தே.பொருட்கள்:
பால் - 1 கப்
டீ பேக் - 1
சர்க்கரை - இனிப்புக்கேற்ப

பொடிக்க:
ஏலக்காய் -7
பட்டை - 1 சிறுதுண்டு
சுக்கு - 1 சிறுதுண்டு
கிராம்பு - 2
மிளகு - 3
 
செய்முறை :
*பொடிக்க கொடுத்துள்ளவைகளை பொடிக்கவும்.(எனக்கு ஏலக்காய் வாசனை ரொம்ப பிடிக்கும்.அதனால் நான் அதிகம் சேர்ப்பேன்.ஏலக்காய் டீ குடித்தால் டென்ஷன் குறையும்,மூளை சுறுசுறுப்பாகும்.புக்கில் படித்தது).

*பாத்திரத்தில் சிறிது தண்ணீர் வைத்து கொதித்ததும் டீ பேக் சேர்த்து கொதிக்கவிடவும்.பின் பாலை சேர்த்து கொதிக்க வைத்து பொடித்த பொடியில் 1 1/2 டீஸ்பூன் சேர்க்கவும்.

*கொதித்ததும் வடிகட்டி சர்க்கரை சேர்த்து குடிக்கவும்.சுவையும் மணமும் ரொம்ப நல்லாயிருக்கும்.
 
பி.கு:
ஊரிலிருந்து வரும் போது 3 ரோஸஸ் மசாலா டீ 2 பாக்கெட் வாங்கி வந்தேன்.அதில் ஒரு வாசனையும்,ருசியும் இல்லை.வீணாக்க கூடாதுன்னு அதைபோட்டு குடிக்கிறேன்.இனி வாங்ககூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்.

Tuesday, April 13, 2010

தே.பொருட்கள்:

தேங்காய் - 1/2 மூடி
எலுமிச்சை பழம் - 1
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - வாசனைக்கு
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பில்லை - சிறிது
 
செய்முறை :
*தேங்காயை துருவி அரைத்து முதல் மற்றும் இரண்டாம் பால் எடுக்கவும்.எலுமிச்சை பழத்தில் சாறு பிழியவும்.

*பாத்திரத்தில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து 2ம் பாலை ஊற்றவும்.

*உப்பு+மஞ்சள்தூள் சேர்க்கவும்.

*1 கொதி வரும் போது முதல் பாலை ஊற்றவும்.

*நுரை வரும் போது எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.
 
பி.கு:
முதல் பாலை ஊற்றியதும் கொதிக்கவிடக்கூடாது.அடுப்பிலிருந்து இறக்கும்போதுதான் எலுமிச்சைசாறு ஊற்றவும்.புளிப்பு வேண்டுமானால் மேலும் 1 பழம் பிழிந்து ஊற்றவும்.டின் பாலையும் உபயோக்கிக்கலாம்.
தே.பொருட்கள்:

உதிராக வடித்த சாதம் - 2 கப்
டோஃபு - 100 கிராம்
ப்ரோக்கலி பூக்கள் - 1 கப்
துருவிய கேரட் - 1
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - 1
மிளகாய்த்தூள் - 1/4 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பட்டர் - 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் -1 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க:
பச்சை மிளகாய் - 4
சோம்பு - 1/4 டீஸ்பூன்
கிராம்பு - 2
பட்டை - 1சிறுதுண்டு
தேங்காய்த்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை :

*டோஃபுவில் சிறிது மிளகாய்த்தூள்+சிறிது இஞ்சி பூண்டு விழுது+ உப்பு சேர்த்து 10 நிமிடம் ஊறவைத்து எண்ணெயில் லேசாக பொரித்தெடுக்கவும்.

*அரைக்க கொடுத்துள்ளவைகளை அரைக்கவும்.ப்ரோக்கலியை உப்புத் தண்ணீரில் அலசி வைக்கவும்.

*கடாயில் பட்டர்+எண்ணெய் விட்டு சீரகம் போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+இஞ்சி பூண்டு விழுது+மிளகாய்தூள்+மஞ்சள்தூள்+ப்ரோக்கலி+துருவிய கேரட் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*நன்றாக வதங்கியபின் அரைத்த விழுது+கேரட் துறுவல்+உப்பு+சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்க விடவும்.

*நன்கு கொதிக்கும்போது பொரிந்த டோஃபுவை போட்டு மேலும் சிறிது நேரம் கொதிக்கவிட்டு,சாதத்தை போட்டு கிளறி இறக்கவும்.

Monday, April 12, 2010

இந்த கட்லட்டில் நான் எண்ணெயே சேர்க்காமல் பார்லி,ஒட்ஸில் செய்துள்ளேன்.பார்லி கொஞ்சம் கொழகொழப்பாக இருப்பதால் கட்லட் ஷேப் சரியாக வரவில்லை.நான் ப்ரெட் க்ரம்ஸில் புரட்டாமல் பேக் செய்துள்ளேன்.விருப்பமுள்ளவர்கள் அதில் புரட்டியும் பேக் செய்யலாம்.
 
தே.பொருட்கள்:
வேகவைத்த பார்லி - 1/4 கப்
பொடித்த ஒட்ஸ் - 1/2 கப்
முருங்கைக்காய் - 2
துருவிய கேரட் - 1 சிறியது
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த புதினா,கொத்தமல்லி - சிறிதளவு
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 1
பொடியாக அரிந்த இஞ்சி - 1/4டீஸ்பூன்
எண்ணெய் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
 
செய்முறை :

*முருங்கைக்காயை அரிந்து வேகவைத்து சதைப்பகுதியை மட்டும் தனியாக எடுக்கவும்.பார்லியை அரைக்கவும்.

*இதனுடன் எண்ணெய் தவிர அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.கலவை தளர்த்தியாக இருந்தால் மேலும் சிறிது பொடித்த ஒட்ஸ் சேர்க்கவும்.

*அவன் டிரேயில் அலுமினியம் பேப்பர் வைத்து 1/4 டீஸ்பூன் எண்ணெய் தடவி மாவை விருப்பமான வடிவங்களில் தட்டி வைக்கவும்.

*அவனை 270 டிகிரிக்கு முற்சூடு செய்து 20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.இடையில் கட்லட்டை ஒருபக்கம் வெந்ததும் மறுபுறம் திருப்பி விடவும்.

*இந்த கட்லட் மிகவும் நன்றாக இருக்கும்.
அக்பர், சசிகுமார்அவர்கள் எனக்கு அளித்த விருது.அவருக்கு என நன்றி!!
ஸாதிகா அக்கா எனக்கு அளித்த ராணி விருது.அக்காவுக்கு என் நன்றி!!

அக்பர் அவர்கள் எனக்கு அளித்த விருது.அவருக்கு என நன்றி!!
ஜெய்லானி எனக்கு கொடுத்த விருது.அவருக்கும் என் மனமார்ந்த நன்றி!!

இந்த விருதுகளை ஜெய்,ரம்யாஆனந்த்,ப்ரியா,கீதா,நிதுபாலா,ப்ரியாராஜ்,பது,பிஎஸ்,பிரேமலதா,ப்ரியா, பத்மா,பவித்ரா ஸ்ரீஹரி இவர்களுக்கு கொடுக்கிறேன்..
நிதுபாலா அவருடைய ஈவெண்டில் கலந்து கொண்டதற்காக அளித்த விருது.நன்றி நிது!

Saturday, April 10, 2010


சில்லி சிக்கன்,சில்லி பராட்டோ செய்கிறோமே இட்லியில் செய்தால் என்ன என்று தோன்றிய ஐடியா இது.மீதமான இட்லியில் செய்தது...

தே.பொருட்கள்:
இட்லி - 6
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த தக்காளி - 1
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 1
பொடியாக அரிந்த இஞ்சி,பூண்டு - 1டீஸ்பூன்
பொடியாக அரிந்த குடமிளகாய் - 2 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1/4 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தூள் - 1/4 டேபிள்ஸ்பூன்
தக்காளி கெட்சப் - 1 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை :
*இட்லியை கட்செய்து முற்சூடு செய்த அவனில் 270 டிகிரியில் 10 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு+வெங்காயம்+தக்காளி+பச்சை மிளகாய்+தூள் வகைகள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*நன்கு வதங்கியதும் 1/4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு பின் சோயா சாஸ்+கெட்சப்+குடமிளகாய்+இட்லி சேர்த்து கிளறி இறக்கவும்.

Friday, April 9, 2010

தே.பொருட்கள்:

வாழைக்காய் - 2
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
நசுக்கிய பூண்டுப்பல் - 4
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
சோம்புத்தூள் - 1டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
ஊப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
 
செய்முறை :

*வாழைக்காயை தோலோடு வேகவைக்கவும்.வெந்ததும் தோல் தனியாக வந்துவிடும்.

*வாழைக்காயினை துருவிக்கொள்ளவும்.அதனுடன் உப்பு+மஞ்சள்தூள்+மிளகுத்தூள்+சோம்புத்தூள் சேர்த்து பிசைந்து வைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து வெங்காயம்+நசுக்கிய பூண்டுப்பல்+பச்சை மிளகாயினை போட்டு வதக்கவும்.

*வதங்கியதும் வாழைக்காயினை போட்டு நன்கு கிளறவும்.

*பொலபொலவென வரும்போது தேங்காய்த்துறுவலை சேர்த்து இறக்கவும்.

Thursday, April 8, 2010


உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கோஸை பச்சையாக சாப்பிடுவது நல்லது.

தே.பொருட்கள்:

பொடியாக அரிந்த கேபேஜ் - 1/2 கப்
அரிந்த ஸ்ட்ராபெர்ரி பழம் - 6
ஆலிவ் ஆயில் - 1 டீஸ்பூன்
வினிகர் - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
எள் - அலங்காரத்துக்கு
 
செய்முறை :
*எள்ளைத்தவிர அனைத்தையும் ஒன்றாக கலந்து,அதன்மேல் எள் தூவி பரிமாறவும்.

*1/2 மணிநேரம் ஊறிய பிறகு சாப்பிட நல்லாயிருக்கும்.

Wednesday, April 7, 2010

தே.பொருட்கள்:

மைதா - 1 கப்
ப்ரவுன் சர்க்கரை - 1 டேபிள்ஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
பட்டை பவுடர் - 1/4 டீஸ்பூன்
பால் - 3/4 கப்
கனிந்த வாழைப்பழம் - 1
வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
பட்டர் - சுடுவதற்க்கு
 
செய்முறை :

*ஒரு பவுலில் மைதா+சர்க்கரை+உப்பு+பேக்கிங் பவுடர்+பட்டைத்தூள் அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.

*இன்னொரு பவுலில் வாழைப்பழத்தை மசிக்கவும்.அதனுடன் வெனிலா எசன்ஸ் + மைதா கலவை +பால் சேர்த்து கலக்கவும்.

*கலவை ரொம்ப திக்காக இருந்தால் மேலும் சிறிது பால் சேர்க்கவும்.

*தவாவில் பட்டர் விட்டு ஒரு கரண்டி மாவை ஊற்றவும்.தேய்க்க கூடாது,அதுவே பரவிக்கொள்ளும்.

*ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி வேகவிட்டு தேனுடன் பரிமாறவும்.

Sending this recipe to Pancakes event started by Priya