நான் இருக்கும் இடத்தில் ப்ரெட் கடைகள் தூரம்.அதனால் இந்த ப்ரெட் ரெசிபியை கூகிளாண்டவரிடம் தேடி பார்த்து செய்த ரெசிபி.முதல் முயற்சியில் நன்றாக வந்ததில் ரொம்ப சந்தோஷம் எனக்கு.
தே.பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
ஈஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்
வெதுவெதுப்பான பால் - 1/4 கப்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
மைதாமாவு - மேலே தூவ
உப்பு - தேவைக்கு
செய்முறை :
*கோதுமை மாவில் உப்பு+சர்க்கரையைக் கலக்கவும்.சிறிது வெதுவெதுப்பான நீரில் ஈஸ்டைக் கலக்கி 5 நிமிடம் வைத்தால் பொங்கி வரும்.
*மாவில் பால்+ஈஸ்ட் நீர் கலந்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும்.அதை ஒரு ஈரமான மெல்லியதுணியில் 2 மணிநேரம் மூடி வெப்பமான இடத்தில் வைக்கவும்.
*2 மணிநேரம் கழித்து 2 மடங்காக மாவு உப்பி இருக்கும்.மறுபடியும் நன்கு மிருதுவாக பிசைந்து ஈரத்துணியில் மூடி 1 மணிநேரம் வைக்கவும்.
* 1 மணிநேரம் கழித்து அவனை 190 டிகிரிக்கு முற்சூடு செய்யவும்.
*கேக் செய்யும் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி மாவை வைத்து கையால் வட்டமாக தட்டி மைதாவை மேலே தூவி 15 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
*சுவையான ப்ரெட் ரெடி.
Wednesday, April 21, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment