
தே.பொருட்கள்:
வேகவைத்த பார்லி - 1/4 கப்
பொடித்த ஒட்ஸ் - 1/2 கப்
முருங்கைக்காய் - 2
துருவிய கேரட் - 1 சிறியது
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த புதினா,கொத்தமல்லி - சிறிதளவு
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 1
பொடியாக அரிந்த இஞ்சி - 1/4டீஸ்பூன்
எண்ணெய் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
செய்முறை :
*முருங்கைக்காயை அரிந்து வேகவைத்து சதைப்பகுதியை மட்டும் தனியாக எடுக்கவும்.பார்லியை அரைக்கவும்.
*இதனுடன் எண்ணெய் தவிர அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.கலவை தளர்த்தியாக இருந்தால் மேலும் சிறிது பொடித்த ஒட்ஸ் சேர்க்கவும்.
*அவன் டிரேயில் அலுமினியம் பேப்பர் வைத்து 1/4 டீஸ்பூன் எண்ணெய் தடவி மாவை விருப்பமான வடிவங்களில் தட்டி வைக்கவும்.
*அவனை 270 டிகிரிக்கு முற்சூடு செய்து 20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.இடையில் கட்லட்டை ஒருபக்கம் வெந்ததும் மறுபுறம் திருப்பி விடவும்.
*இந்த கட்லட் மிகவும் நன்றாக இருக்கும்.
0 comments:
Post a Comment