Monday, May 12, 2014

தே.பொருட்கள்

சாதம் - 2 கப்
 மிளகு + சீரகம் - தலா 1 டேபிள்ஸ்பூன்
நெய் + நல்லெண்ணெய் - தலா 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க

கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி -1/4 டீஸ்பூன்
முந்திரி - தேவைக்கு

செய்முறை
*மிளகு+ சீரகத்தை பொடிக்கவும்.

*கடாயில் நெய்+எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து சாதம்+உப்பு+பொடித்த மிளகு சீரகம் சேர்த்து கிளறி இறக்கவும்.

பி.கு
*இதேபோல் சாதத்துக்கு பதில் அவல் -இல் செய்யலாம்.

Thursday, May 8, 2014

Recipe Source : Aayi's Recipe

நான் கொடுத்துள்ள அளவில் 2 நபர் சாப்பிடலாம்.

தே.பொருட்கள்

சாட் பூரி - 10
இனிப்பு +க்ரீன் சட்னி - தலா 1 டேபிள்ஸ்பூன்
ஓமப்பொடி/சேவ் - மேலே தூவ
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய தக்காளி - 2 டேபிள்ஸ்பூன்
கேரட் துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்த்ழை - 2 டேபிள்ஸ்பூன்

க்ரேவி/ராக்தா செய்ய

மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்த துவரம்பருப்பு - 1/2 கப்
காய்ந்த பச்சை பட்டாணி -1/2 கப்
தேங்காய்த்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 3/4 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு

வெறும் கடாயில் வறுக்க

கிராம்பு -2
பட்டை - 1 சிறுதுண்டு
தனியா - 1/2 டீஸ்பூன்
சீரகம் -1/2 டீஸ்பூன்
மிளகு -1/8 டீஸ்பூன்
ஜாதிக்காய் -மிகசிறிய அளவு
மராத்தி மொக்கு - 2

மராத்தி மொக்கு பதில் அன்னாச்சி மொக்கு -1 சேர்த்தேன்.

செய்முறை

*பச்சை பட்டாணியை முதல்நாள் இரவே ஊறவைத்து உப்பு சேர்த்து வேகவைக்கவும்.

*வறுக்க கொடுத்துள்ளவைகளை வெறும் கடாயில் வறுத்து அதனுடன் மிளகய்த்தூள்+தேங்காய்த்துறுவல்+வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.

*பாத்திரத்தில் அரைத்த விழுது +1/2 கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.பின் பச்சை பட்டாணியை சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவைத்து இறக்கவும்.

*க்ரேவி தண்ணியாக இல்லாமலும் கெட்டியாக இல்லாமலும் இருக்கவேண்டும்.

பரிமாறும்முறை

*ஒரு சிறியதட்டில் பூரியை நொறுக்கி போடவும்.
*அதன்மேல் சூடான் க்ரேவியை ஊற்றவும்.
*அதன் மேல் வெங்காயம்+தக்காளி+கேரட் துறுவல்+சட்னிகள்+சேவ்+கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
பி.கு

*க்ரேவி பரிமாறும் போது சூடாக இருக்கவேண்டும். இதற்க்கு காய்ந்த பச்சை பட்டாணிதான் சிறந்தது.

Monday, May 5, 2014

Recipe Source: Indianrecipevideo
தே.பொருட்கள்

ரவை - 1/2 கப்
உப்பு - தேவைக்கு
பேக்கிங் பவுடர் -1/4 டீஸ்பூன்
நீர் -1/4 கப்
எண்ணெய் - பொரிக்க

செய்முறை

*பவுலில் நீர் தவிர அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.
*நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திதிற்க்கு பிசைந்து ஈரத்துணியால் மூடி 20 நிமிடங்கள் வைக்கவும்.
*20 நிமிடங்கள் கழித்து மாவை நன்கு பிசைந்து எலுமிச்சை பழளவு உருண்டை எடுத்து நன்கு மெலிதாக  உருட்டி குக்கீ கட்டரால் வெட்டு எடுக்கவும்.

*உருட்டும் போது மாவு ஒட்டினால் நெய் தடவி உருட்டவும்.
*பூரிகளை எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
*உப்பிய பூரிகளை பானி பூரி ,தஹி பூரிக்கும்,உப்பாத பூரிகளை பேல்பூரிக்கும் பயன்படுத்தலாம்.

பி.கு

*விரும்பினால் பூரி பொன்னிறமாக வேண்டுமானால் மாவு பிசையும் 1 டேபிள்ஸ்பூன் உளுத்தமாவு சேர்த்து பிசையலாம்.

*பூரிகளை காற்றுபுகாத டப்பாவில் 10 நாள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

*இந்த அளவில் 16 பூரிகள் வரும்.