Wednesday, February 1, 2012

அரைத்துவிட்ட சாம்பார் /Araituvitta Sambhar

 தே.பொருட்கள்
துவரம்பருப்பு - 1கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பூண்டுப்பல் - 4
மணத்தக்காளிகீரை - 1 சிறிய கட்டு
வெங்காயம்.தக்காளி - தலா 1
புளிகரைசல் - 1/2 கப்
உப்பு+எண்ணெய் - தேவைக்கு

எண்ணெயில் வறுத்து பொடிக்க
காய்ந்த மிளகாய் - 2
மிளகு,சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
தனியா - 1 டேபிள்ச்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது

தாளிக்க
கடுகு,உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/4டீஸ்பூன்


செய்முறை
*மணத்தக்காளிக்கீரையில் இருக்கும் விதைகளை தனியாக எடுத்து வைக்கவும்.


*பருப்பை மஞ்சள்தூள்+பூண்டு+கீரை விதை சேர்த்து நன்கு குழைய வேகவைக்கவும்.
 *கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.வெங்காயம்+தக்காளியையும் நறுக்கவும்.
 *பொடிக்க கொடுத்துள்ளவைகளை நைசாக பொடிக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெங்காயம்+தக்காளி+கீரை அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*பின் புளிகரைசல்+உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

*பச்சை வாசனை அடங்கியதும் பொடித்த பொடியிலிருந்து 1டேபிள்ஸ்பூன் +வேகவைத்த பருப்பை சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிடவும்.

*பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.

பி.கு

*எந்த கீரை வேண்டுமானாலும் சேர்க்கலாம்.கீரைக்கு பதில் விரும்பிய காய்களும் சேர்த்து செய்யலாம்.

0 comments:

Post a Comment