Wednesday, February 8, 2012

பஞ்சாமிர்தம் /Panchamirtham

பஞ்சாமிர்தம் தமிழ் கடவுளான முருகனின் ஸ்பெஷல் நைவேத்தியம்.தைப்பூசத்திருநாளான நேற்று என் வாழ்வில் மறக்க முடியாத ஸ்பெஷல் நாள்.அதற்காக நேற்று பஞ்சாமிர்தம் செய்து முருகனுக்கு நைவேத்தியம் செய்து படைத்தேன்.அதுமட்டுமில்லாமல் இந்த ஸ்பெஷல் ரெசிபி எனது 600வது பதிவு!!

தே.பொருட்கள்

வாழைப்பழம் -3
ப்ரவுன் சர்க்கரை - 1/2 கப் (அ) இனிப்பிற்கேற்ப
பேரிச்சம்பழம் - 20
சிகப்பு ஆப்பிள் -1
உலர் திராட்சை - 2 டேபிள்ஸ்பூன்
கல்கண்டு - 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்

செய்முறை

*வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொள்ளவும்.பேரிச்சயை விதை நீக்கி பொடியாக அரியவும்.

*ஆப்பிளை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.

*இதனுடன் மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலக்கவும்.

பி.கு
துருவிய ஆப்பிளுக்கு பதில் தேன் சேர்க்கவும்.என்னிடம் இல்லாததால் சேர்க்கவில்லை.தேன் சேர்க்கும் போது சர்க்கரையின் அளவை குறைத்து போடவும்.

0 comments:

Post a Comment