Monday, February 27, 2012

தவா புலாவ்& சுகினி கேரட் பச்சடி /Tawa Pulao & Zucchini 'N' Carrot Pachadi

 மகியின் குறிப்பை பார்த்து செய்தது.நன்றி மகி!!

தவா புலாவ்

தே.பொருட்கள்
உதிரியாக வடித்த சாதம் - 2 கப்
நறுக்கிய காய்கள் - 1 கப் (கேரட்,பீன்ஸ்,பச்சை பட்டாணி)
பாவ் பாஜி மசாலா -2 டீஸ்பூன்
சீரகம் -1 டீஸ்பூன்
தக்காளி - 1
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை
*கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் போட்டு தாளித்து தக்காளி+உப்பு சேர்த்து குழைய வதக்கவும்.

*பின் தூள் வகைகள் சேர்த்து நன்கு வதக்கியபின் காய்களை போட்டு வதக்கவும்.

*சிறிதளவு மட்டும் நீர் சேர்த்து காய்களை வேகவைக்கவும்.காய்கள் அரை வேக்காடு வெந்தால் போதும்.

*பின் சாதம் சேர்த்து கிளறி எலுமிச்சை சாறு+கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.

பி.கு

*காலிபிளவர்,குடமிளகாய் சேர்த்தும் செய்யலாம்.மீதமான சாதத்திலும் செய்யலாம்.

சுகினி கேரட் பச்சடி

தே.பொருட்கள்

கேரட்,சுகினி - தலா 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1
சாட் மசாலா - 1/4 டீஸ்பூன்
தயிர் - 250 கிராம்
உப்பு - தேவைக்கு

செய்முறை

*கேரட்+சுகினியை துருவவும்.அதனுடன் பச்சை மிளகாய்+உப்பு+தயிர் சேர்த்து கிளறி சாட் மசாலாவை மேலே தூவி பரிமாறவும்.

0 comments:

Post a Comment