இந்த ரெசிபி பாதாம் பேடாக்காக செய்தது.நேரமும் பொறுமையும் இல்லாததால் பேடா போல் செய்யாமல் அல்வா போல சாப்டாச்சு..நன்றி ஜெயந்தி!!
தே.பொருட்கள்
பாதாம் - 1 கப்
சர்க்கரை - 3/4 கப்
பால் பவுடர் -1/2 கப்
நெய் -4 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் -1/4 டீஸ்பூன்
ஆரஞ்சு கலர் - 1துளி
செய்முறை
*பாதாம் பருப்பை கொதிக்கும் நீரில் 1/2 மணிநேரம் ஊறவைத்து தோலுரிக்கவும்.
*அதனை சிறிது பால் சேர்த்து மைய அரைக்கவும்.
*மேலும் அதனுடன் பால் பவுடர்+சர்க்கரை சேர்த்து அரைக்கவும்.
*நான்ஸ்டிக் கடாயில் நெய் விட்டு அரைத்த விழுதை சேர்த்து கைவிடாமல் கிளறிவிடவும்.
*சிறிது கெட்டியாக வரும் போது கலர்+ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.
*கடாயில் கெட்டியாகி ஒட்டாமல் வரும் போது இறக்கி தட்டில் சமமாக கொட்டி ஆறவிட்டு பரிமாறவும்.
பேடா போல் செய்ய
*நன்கு ஆறியதும் சிறு உருண்டைகளாக எடுத்து தட்டி,நடுவில் லேசாக அழுத்தி விடவும்.
*அதன் நடுவில் பாதாம்,பிஸ்தா வைத்து அலங்கரித்து பரிமாறலாம்.

0 comments:
Post a Comment