Wednesday, March 9, 2011

மன்னார்குடி கொஸ்து/ Mannargudi Kostu

புவனேஸ்வரி அவர்களின் குறிப்பை பார்த்து கத்திரிக்காய்+உருளையுடன் சேர்த்து செய்தேன்.மிகவும் அருமையாக இருந்தது.நன்றி புவனேஸ்வரி!!. எங்கம்மா உருளை சேர்க்காமல் கத்திரியுடன் வெங்காயம்,தக்காளி சிலபொருட்கள் சேர்த்து ஒன்றாக வேகவைத்து கடைந்து இட்லிமாவு சேர்த்து கொதிக்க வைத்து,கடைசியாக தாளிப்பாங்க.எனக்கு ரொம்ப பிடிக்கும் அந்த கத்திரிக்காய் கடைசல்.இந்த குறிப்பும் வித்தியாசமா நன்றாகயிருந்தது.

தே.பொருட்கள்:
கத்திரிக்காய் - 1 பெரியது
உருளைக்கிழங்கு - 1 சிறியது
பொடியாக அரிந்த வெங்காயம் - 1 பெரியது
பொடியாக அரிந்த தக்காளி - 4 புளிப்பிற்கேற்ப சேர்க்கவும்
கீறிய பச்சை மிளகாய் - 3
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
சாம்பார் பொடி - 3/4 டேபிள்ஸ்பூன்
இட்லி மாவு - 1 கரண்டி
பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேபிலை - சிறிது

செய்முறை:
*கத்திரிக்காயை பொடியாகவும்,உருளையை தோல் சீவி பொடியாக நறுக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி +கீறிய பச்சை மிளகாய்+காய்கள் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கவும்.

*பின் தேவையானளவு நீர்+உப்பு+மஞ்சள்தூள்+சாம்பார் பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.

*காய்கள் வெந்ததும் கரண்டியால் மசித்துவிட்டு இட்லிமாவு சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு மல்லித்தழை தூவி இறக்கவும்.

*சூடான இட்லி தோசையுடன் இந்த கொஸ்துவை சாப்பிட செம ஜோர்!!

0 comments:

Post a Comment