Tuesday, March 15, 2011

பாகற்காய் சாம்பார் / Bitter gourd Sambhar

தே.பொருட்கள்

பாகற்காய் - 100 கிரம்
வேகவைத்த துவரம்பருப்பு - 1 கப்
புளி கரைசல் - 1/2 கப்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
சாம்பார் பொடி - 1/2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
வெல்லம் -சிறுதுண்டு(விரும்பினால்)
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க
கடுகு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை

*பாகற்காயை விதைகளை நீக்கி வட்டமாக நறுக்கவும்.அதனை சிறிது நேரம் உப்பு சேர்த்து பிசைந்து அரிசி கழுவிய நீரில் கழுவவும்.இப்படி செய்தால் கசப்பு தெரியாது.

*ஒரு பாத்திரத்தில் பாகற்காயை போட்டு முழ்குமளவு நீர்+உப்பு சேர்த்து வேகவைக்கவும்.

*வெந்ததும் புளித்தண்ணீர்+சாம்பார் பொடி சேர்க்கவும்.நன்கு கொதித்த பின் வேகவைத்த பருப்பு+தேங்காய்த்துறுவல் சேர்க்கவும்.

*சிறிது நேரம் கொதிக்கவைத்து விரும்பினால் வெல்லம் சேர்த்து இறக்கவும்.கொஞ்சம்கூட கசப்பே தெரியாது.
 

0 comments:

Post a Comment