Monday, March 31, 2014

செட்டிநாடு நண்டு வறுவல்/Chettinad Crab Varuval

தே.பொருட்கள்

சுத்தம் செய்த நண்டு - 7
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் =தேவைக்கு

அரைக்க

தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
பெருஞ்சீரகம் -1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
கரம்மசாலா - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -7

செய்முறை
*காய்ந்த மிளகாயை சிறிது நேரம் வெந்நீரில் ஊறவைத்து நைசாக அரைக்கவும்.தேங்காய்த்துறுவல்+கசகசா+பெருஞ்சீரகம்+கரம்மசாலா இவற்றையும் விழுதாக அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வெங்காயம்+தக்காளி+இஞ்சி பூண்டு விழுது+காய்ந்த மிளகாய் விழுது என் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

*பின் மஞ்சள்தூள்+உப்பு+நண்டு சேர்த்து வதக்கி தேவையானளவு நீர் சேர்த்து வேகவிடவும்.

*நண்டு வெந்ததும் தேங்காய் மசாலா சேர்த்து கிளறி மேலும் 5 நிமிடங்கள் வரை வதக்கி இறக்கவும்.

பி.கு

*நண்டு சீக்கிரம் வெந்துவிடும் அதனால் குறைவான நீர் சேர்த்து மூடி போட்டு வேகவிடவும்.

*எப்போழுதும் நண்டை சமைக்கும் நேரத்தில்தான் சுத்தம் செய்து சமைக்கவேண்டும்.முன்பே சுத்தம் செய்துவிட்டால் நண்டின் சுவையே மாறிவிடும்.

*இதில் காய்ந்த மிளகாய் பதில் வரமிளகாய்த்தூள் 1 டேபிள்ஸ்பூன் சேர்க்கலாம்.



 

0 comments:

Post a Comment