Thursday, January 24, 2013

மா விளக்கு/ Maa Vilakku

மெயிலில் சிலபேர் கேட்டதால் அவர்களுக்காக இந்த பதிவு....மாவிளக்கு போட்டு அம்மனை வழிபடுவது நலம்..செய்தால் நான் மட்டும் சாப்பிடவேண்டும் என்பதால் கொஞ்சமாகதான் செய்வேன்.மாவிளக்கு உடன் தேங்காய்ப்பல் சேர்த்து சாப்பிட எனக்கு ரொம்ப பிடிக்கும்.

தே.பொருட்கள்

பச்சரிசி - 1/4 கப்
துருவிய வெல்லம் - 1/4 கப்
நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை

*பச்சரிசியை 1/2 மணிநேரம் ஊறவைத்து நீரை வடிகட்டி துணியில் உலர்த்தவும்.

*உலர்ந்ததும் நைசாக   பொடிக்கவும்

*அதனுடன் வெல்லம் சேர்த்து பிசையவும்.அரிசியின் ஈரபதத்திலயே    வெல்லம் பிசைய ஈசியாக இருக்கும்.

*உருண்டையாக பிடித்து நடுவில் குழிபோல் செய்து நெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்றி படைக்கவும்.

பி.கு

அரிசி+வெல்லம் சேர்த்து பிசையும் போட்டு தண்ணீர் தெளித்து பிசையக்கூடாது.

0 comments:

Post a Comment