1. படம்: உதிரிப்பூக்கள்
பாடகி: ஜானகி பாடல்: அழகிய கண்ணே
ஒரு தாய் குழந்தையுடன் சந்தோஷமாக பாடும் பாடல்..கேட்பதற்க்கு ரொம்ப நல்லாயிருக்கும்.
2. படம்: கேளடி கண்மணி
பாடகி: சுசிலா பாடல்: கற்பூர பொம்மை ஒன்று...
இறந்து போன தாயை நினைத்து ஏங்கும் ஒரு குழந்தையின் தவிப்பை கூறும் பாடல்...எப்போ இந்த பாடல் கேட்டாலும் கண்கலங்கும் எனக்கு...
3.படம்: கன்னத்தில் முத்தமிட்டால்
பாடகி: சின்மயி பாடல்: ஒரு தெய்வம் தந்த பூவே..
கேட்பதற்க்கு மெலடியா ரொமப் நல்லாயிருக்கும்.சின்மயி குரலும் ரொமப் பிடிக்கும்.
4.படம்: ஜோடி
பாடகி: சுஜாதா
பாடல்: ஒரு பொய்யாவது சொல் கண்ணே
என் காதல் நீதான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்கின்றேன்
காதலுக்காக ஏங்கும் காதலனின் கவிதையை காதலி பாடும் பாடல்...
5.படம்: வள்ளி
பாடகி: ஸ்வர்ணலதா பாடல்: என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்..
ஸ்வர்ணலதாவின் குரலில் இந்த பாடல் கேட்க மிக அருமையாக இருக்கும்..
6.படம்: சிப்பிக்குள் முத்து
பாடகி: சைலஜா பாடல்: வரம் தந்த சாமிக்கு
ஒரு தாய் தன் குழந்தையை தாலாட்டி சீராட்டி பாடும் பாடல்...
7.படம்: நினைத்தேன் வந்தாய்
பாடகி: அனுராதா ஸ்ரீராம்,சித்ரா
பாடல்: மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார்,சொல்லு நீ
தாமரையே தாமரையே காதலிக்கும் காதலன் யார் சொல்லு நீ...
அக்கா,தங்கை இருவரும் வருங்கால கணவரை நினைத்து பாடும் பாடல்...
8.படம்: சிந்து பைரவி
பாடகி: சித்ரா பாடல்: நானொரு சிந்து ...
இவர்தான் தன் தாய் என்று தெரிந்தும் அம்மா என்று கூப்பிட குடியாத ஏக்கத்தில் நாயகி பாடும் பாடல்..
9.படம்: பாகபிரிவினை
பாடகி: சுசிலா பாடல்: தங்கத்திலே ஒரு குறை இருந்தால் தரத்திலே குறை வருமோ...
அருமையான கருத்துள்ள பாடல்..
10.படம்: உள்ளம் கொள்ளை போகுதே
பாடகி: சுஜாதா பாடல்: கவிதைகள் சொல்லவா....
சுஜாதாவின் குரலில் கேட்க நன்றாகயிருக்கும்...
விருப்பமுள்ளவர்கள் தொடரலாம்...
நன்றி மகி!!
நன்றி சௌந்தர்!!
நன்றி காயத்ரி!!

0 comments:
Post a Comment