Saturday, December 4, 2010

பிடித்த பாடல்களும்,விருதும்...

ஆசியா அக்காவும்,ஸாதிகா அக்காவும் பிடித்த பாடல்களை எழுத அழைத்த அவர்களுக்கு நன்றி.பெண் பாடகிகள் மட்டும் பாடிய பாடல் போட வேண்டும் என்பது விதிமுறை.

1. படம்:  உதிரிப்பூக்கள்

பாடகி:  ஜானகி  பாடல்:  அழகிய கண்ணே

ஒரு தாய் குழந்தையுடன் சந்தோஷமாக பாடும் பாடல்..கேட்பதற்க்கு ரொம்ப நல்லாயிருக்கும்.

2. படம்: கேளடி கண்மணி

பாடகி: சுசிலா  பாடல்: கற்பூர பொம்மை ஒன்று...

இறந்து போன தாயை நினைத்து ஏங்கும் ஒரு குழந்தையின் தவிப்பை கூறும் பாடல்...எப்போ இந்த பாடல் கேட்டாலும் கண்கலங்கும் எனக்கு...

3.படம்: கன்னத்தில் முத்தமிட்டால்

பாடகி: சின்மயி  பாடல்: ஒரு தெய்வம் தந்த பூவே..

கேட்பதற்க்கு மெலடியா ரொமப் நல்லாயிருக்கும்.சின்மயி குரலும் ரொமப் பிடிக்கும்.

4.படம்: ஜோடி 

பாடகி: சுஜாதா 

பாடல்: ஒரு பொய்யாவது சொல் கண்ணே
என் காதல் நீதான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்கின்றேன்

காதலுக்காக ஏங்கும் காதலனின் கவிதையை காதலி பாடும் பாடல்...

5.படம்: வள்ளி

பாடகி: ஸ்வர்ணலதா  பாடல்: என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்..

ஸ்வர்ணலதாவின் குரலில் இந்த பாடல் கேட்க மிக அருமையாக இருக்கும்..

6.படம்: சிப்பிக்குள் முத்து

பாடகி: சைலஜா  பாடல்: வரம் தந்த சாமிக்கு

ஒரு தாய் தன் குழந்தையை தாலாட்டி சீராட்டி பாடும் பாடல்...

7.படம்: நினைத்தேன் வந்தாய்

பாடகி: அனுராதா ஸ்ரீராம்,சித்ரா

பாடல்: மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார்,சொல்லு நீ
                தாமரையே தாமரையே காதலிக்கும் காதலன் யார் சொல்லு நீ...

அக்கா,தங்கை இருவரும் வருங்கால கணவரை நினைத்து பாடும் பாடல்...

8.படம்: சிந்து பைரவி

பாடகி: சித்ரா  பாடல்: நானொரு சிந்து ...

இவர்தான் தன் தாய் என்று தெரிந்தும் அம்மா என்று கூப்பிட குடியாத ஏக்கத்தில் நாயகி பாடும் பாடல்..

9.படம்: பாகபிரிவினை

பாடகி: சுசிலா  பாடல்: தங்கத்திலே ஒரு குறை இருந்தால் தரத்திலே குறை வருமோ...

அருமையான கருத்துள்ள பாடல்..

10.படம்: உள்ளம் கொள்ளை போகுதே

பாடகி: சுஜாதா பாடல்: கவிதைகள் சொல்லவா....

சுஜாதாவின் குரலில் கேட்க நன்றாகயிருக்கும்...

விருப்பமுள்ளவர்கள் தொடரலாம்...
நன்றி மகி!!
நன்றி சௌந்தர்!!
நன்றி காயத்ரி!!

0 comments:

Post a Comment