
மட்டன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2பெரியது
தக்காளி - 2 பெரியது
இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்
தயிர் - 250 கிராம்
பச்சை மிளகாய் - 4
புதினா,கொத்தமல்லி - தலா 1 கட்டு
தேங்காய் - 1/2 மூடி
இஞ்சி - 1 அங்குலத்துண்டு
பிரியாணி மசாலாபொடி - 1 1/2 டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
ஏலக்காய் - 5
எலுமிச்சை பழம் - 1
உப்பு +எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:பட்டை - 1 துண்டு
கிராம்பு - 3
பிரியாணி இலை - 2
ஏலக்காய் -2
செய்முறை:*மட்டனில் சிறிது உப்பு+125 கிராம் தயிர்+கரம் மசாலா+1 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து முதல் நாள் இரவே பிசைந்து ப்ரிட்ஜில் வைக்கவும்.
*வெங்காயம்+தக்காளியை நீளவாக்கில் அரியவும்.பச்சை மிளகாயை கீறவும்.
*ஊறவைத்த மட்டனை அப்படியே குக்கரில் நீர் சேர்க்காமல் 3 விசில் வரை வேகவைக்கவும்.
*பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு அரிசியை லேசாக வதக்கி தனியாக வைக்கவும்.வேகவைத்த மட்டனை தனியாக வைத்து நீரை அளக்கவும்.
*அதே பாத்திரத்தில் நெய்+எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

0 comments:
Post a Comment