வேப்பமரத்தின் மருத்துவகுணங்கள் பற்றி அனைவரும் அறிந்ததே!!
குடலில் இருக்கும் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் வேப்பம்பூவுக்கு உண்டு.
இதனை வாரம் ஒருமுறை குழந்தைகளுக்கு செய்து கொடுப்பது நல்லது.
தே.பொருட்கள்
புளிகரைசல் - 2 கப்
தக்காளி - 1 பெரியது
ரசப்பொடி - 1 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்(விரும்பினால்)
மஞ்சள்தூள் ,பெருங்காயத்தூள் - தலா1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தாளிக்க
நெய்(அ)எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
கா.மிளகாய் - 1
வேப்பம்பூ - 2 டீஸ்பூன்
செய்முறை
*புளிகரைசலில் தக்காளியை கரைத்து அதனுடன் மஞ்சள்தூள்+பெருங்காயத்தூள்+உப்பு+மிளகாய்த்தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
*பச்சை வாசனை அடங்கியதும் ரசப்பொடி சேர்த்து கொதிக்கவிட்டு நுரைவரும் போது இறக்கவும்.*கடாயில் நெய் விட்டு கடுகு+காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து வேப்பம்பூவை சேர்த்து கருகாமல் வறுத்து ரசத்தில் சேர்க்கவும்.
பி.கு
*வேப்பம்பூ கருக விட்டால் ரசம் கசக்கும்.
*கறிவேப்பிலை,கொத்தமல்லி சேர்த்தால் ரசத்தின் சுவை மாறுபடும்.
*வேப்பம்பூ நாட்டு மருந்துகடைகளில் கிடைக்கும்.

0 comments:
Post a Comment