Monday, August 27, 2012

கோதுமை புட்டு /Wheat Flour Puttu

நாம் வழக்கமாக கேழ்வரகு,அரிசிமாவில் தான் புட்டு செய்வோம்.ஒரு மாறுதலுக்காக கோதுமை மாவில் புட்டு செய்தேன்.மிகவும் நன்றாக இருந்தது.நன்றி சங்கீதா!!

தே.பொருட்கள்

கோதுமை மாவு - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
ஏலக்காய்த்தூள்+உப்பு  -தலா 1/4 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் -1/4 கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*கோதுமைமாவை கடாயில் வாசனை வரும் வரை வறுத்து ஆறவைக்கவும்.

*ஆறியதும் உப்பு கலந்து வெந்நீர் சேர்த்து தெளித்து உதிரியாக வரும் வரை பிசையவும்.

*கையால் உருண்டை  பிடித்தால் உதிரியாக விழவேண்டும்,அதுவே பதம்.

*அதனை ஆவியில் 10 நிமிடம் வேகவைத்தெடுக்கவும்.

*மாவை கட்டியில்லாமல் பிசையவும். கட்டியுள்ள மாவை இளஞ்சூடாக இருக்கும் போதே மாவினை மிக்ஸியில் போட்டு விப்பரில் 1 சுற்று சுற்றி எடுத்தால் நன்கு உதிரியாக இருக்கும்.

*பின் அதனுடன் மீதமுள்ள பொருட்களை ஒன்றாக கலந்து பரிமாறவும்.

பி.கு
*சர்க்கரை பதில் ப்ரவுன் சர்க்கரையை பயன்படுத்தினால் புட்டு இன்னும் சுவையாக இருக்கும்.

0 comments:

Post a Comment