பொன்னாங்கண்ணி கீரையை புளி போட்டு கடைந்தால்
அண்ணாமலையாருக்கு (சிவன்) அடிநாக்கும் தித்திக்கும் என அம்மாவிடம் எங்க வீட்டு கீரைக்காரம்மா சொல்வாங்க.கார்த்திகை தீபத்தன்று இக்கீரையை புளிபோட்டு கடைந்து படையல் செய்வது மிக நல்லது.
தே.பொருட்கள்
பொன்னாங்கண்ணி கீரை - 1 கப்
பூண்டுப்பல் - 3
நறுக்கிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் -2
புளி - 1 நெல்லிக்காயளவு
உப்பு -தேவைக்கு
தாளிக்க
எண்ணெய் -1/2 டீஸ்பூன்
கடுகு+உளுத்தம்பருப்பு -தலா 1/2 டீஸ்பூன்
செய்முறை
*மேற்கூறிய பொருட்களை ஒன்றாக போட்டு 1/2 கப் நீர் சேர்த்து வேகவைக்கவும்.
*கீரை வெந்ததும் ,ஆறவைத்து நீரைவடிகட்டி மிக்ஸியில் அரைக்கவும்.
*கெட்டியாக இருந்தால் கீரை வேகவைத்த நீர் சேர்த்து ,தாளித்து சேர்க்கவும்.

0 comments:
Post a Comment