Thursday, December 13, 2012

செட்டிநாடு உருளை மசாலா /Chettinad Potato Masala

செட்டிநாடு சமையல் என்றாலே தனி சுவைதான்.நன்றி ரம்யா!!

தே.பொருட்கள்

வேகவைத்த உருளை - 2 பெரியது
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய தக்காளி - 1
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள்தூள்,கடுகு -தலா 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

கரகரப்பாக அரைக்க

காய்ந்த மிளகாய் - 7
சின்ன வெங்காயம் - 1
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்
பூண்டுப்பல் - 3
இஞ்சி - 1 சிறுதுண்டு

செய்முறை
*கடாயில் எண்ணெய் விட்டு கடுகு+கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+மஞ்சள்தூள் சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.

*பின் அரைத்த மசாலா+உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கிய பின் துண்டுகளாகிய உருளையை சேர்த்து வதக்கவும்.

*மசாலா நன்குகலந்த பின் சிறிது நேரம் கிளறி கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.


0 comments:

Post a Comment