Monday, December 10, 2012

பாசிபருப்பு தோசை & கார சட்னி /Moong Dhal Dosa & Kara Chutney

 பாசிபருப்பு தோசை

தே.பொருட்கள்
அரிசி - 1 கப்
பாசிபருப்பு - 1 கப்
வெந்தயம் -1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை
*மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்து  2 மணிநேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.

*மாவை 6 மணிநேரம் புளிக்க வைத்து தோசைகளாக சுட்டெடுக்கவும்.

கார சட்னி
 இந்த சட்னிக்கு வரமிளகாய்த்தூளுக்கு பதில காய்ந்த மிளகாயை ஊறவைத்து அரைத்து சேர்க்கவேண்டும்.நன்றி பிரேமா!!

தே.பொருட்கள்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 3
பொடியாக நறுக்கிய தக்காளி - 5
காய்ந்த மிளகாய் -10 --12
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க

கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்

செய்முறை
 *காய்ந்த மிளகாயை வெந்நீரில் 15 நிமிடங்கள் ஊறவைத்து நைசாக அரைக்கவும்.
 *கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்  போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
 *வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.
 *நன்றாக வதங்கியதும் உப்பு+மிளகாய் விழுது+மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
 *பச்சை வாசனை அடங்கியதும் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.
பி.கு

*மிளகாயை அவரவர் காரத்திற்கேற்ப சேர்க்கவும்.

*பாசிபருப்பு தோசைக்கு காரமான சட்னிதான் நன்றாக இருக்கும்.

0 comments:

Post a Comment