Thursday, November 17, 2011

கீரை+மணத்தக்காளி வத்தல் சாதம்/ Keerai Manathakkali Vathal Rice

தே.பொருட்கள்

உதிராக வடித்த சாதம் - 1 கப்
மணத்தக்காளி வத்தல் - 1 டேபிள்ஸ்பூன்
முள்ளங்கி கீரை - 1 கட்டு
வெங்காயம் - 1
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் - தேவைக்கு

செய்முறை

*கீரை+வெங்காயம் பொடியாக நறுக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு மணத்தக்காளி வத்தலை பொரித்து தனியாக வைக்கவும்.அதே கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம்+மஞ்சள்தூள்+கீரை சேர்த்து வதக்கவும்.

*நீர் ஊற்ற வேண்டாம்,கீரை வெந்ததும் சாதம்+உப்பு+வத்தல்+எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கவும்.

*உருளை வருவல்,சிப்ஸுடன் சாப்பிட நன்றாகயிருக்கும்.

0 comments:

Post a Comment