Thursday, November 3, 2011

தக்காளி சாம்பார்/Tomato Sambhar

தே.பொருட்கள்
துவரம்பருப்பு+பாசிப்பருப்பு - தலா 1/4 கப்
வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
தக்காளி - 4 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க
கடுகு,உளுத்தம்பருப்பு - தலா 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்

செய்முறை
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
*பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.
 *பருப்புகளை மஞ்சள்தூள் சேர்த்து நன்கு குழைய வேகவைக்கவும்.
*தக்காளியை உப்பு சேர்த்து  நன்கு மசிய வதக்கவும்.
*வெந்ததும் வேகவைத்த பருப்பை ஊற்றி 1 கொதி வரும் போது கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
*இட்லி,தோசை,பூரி,சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன்.

0 comments:

Post a Comment