திருமதி.சோலை அவர்களின் குறிப்பில் பார்த்து செய்தது.இட்லி,தோசைக்கு செம காம்பினேஷன்!!
தே.பொருட்கள்
வெங்காயம் - 4 பெரியது
தக்காளி - 1
உருளைக்கிழங்கு - 1 சிறியது
எண்ணெய் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
அரைக்க
தேங்காய்த்துறுவல் - 4 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் -6
பொட்டுக்கடலை - 2 டேபிள்ஸ்பூன்(அ)முந்திரி - 6
தாளிக்க
பட்டை - சிறுதுண்டு
கிராம்பு - 2
சோம்பு - 1 டீஸ்பூன்
செய்முறை
*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.வெங்காயம்+தக்காளி+உருளையை தோல் சீவி இவை அனைத்தையும் பொடியாக நறுக்கவும்.
*குக்கரில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+உருளை+உப்பு சேர்த்து வதக்கவும்.
*பின் தேங்காய் விழுது+3 கப் நீர் விட்டு 1 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.
பி.கு
கடாயில் செய்வதாக இருந்தால் உருளை வெந்த பிறகுதான் தேங்காய் விழுதை சேர்க்கவேண்டும்.

0 comments:
Post a Comment