Monday, April 9, 2012

மீன் பிரியாணி /Fish Biryani

 பிரியாணியில், மீன் பிரியாணி மிகவும் சுவையானது.சமைப்பதற்க்கு நீண்ட நேரம் ஆனாலும்இதனை மிகவும் பொறுமையாக செய்தால் நன்றாக வரும்.அஸ்மா அவர்களின் குறிப்பை பார்த்து இந்த  பிரியாணியை செய்தேன்.சுவையான குறிப்புக்கு மிக்க நன்றி அஸ்மா!!

தே.பொருட்கள்


பாகம் - 1

மீன் துண்டுகள் -1/2 கிலோ
முட்டை -2
எலுமிச்சை சாரு - 1 டீஸ்பூன்
கடலைமாவு - 4 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
மிளகு,சீரகத்தூள் - 3 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிப்பதற்க்கு

பாகம் -2

பாஸ்மதி - 3 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 10
கேரட் - 1
இஞ்சி பூண்டு  விழுது - 3 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1 கைப்பிடி
பால் ,தயிர் - தலா 1 கப்
எலுமிச்சைபழம் - 1
புதினா - 1 கைப்பிடி
கொத்தமல்லிதழை - 1 கட்டு
நெய் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க
பட்டை -1
ஏலக்காய் - 3
கிராம்பு - 3
பிரியாணி இலை -2

செய்முறை

*மீனை சுத்தம் செய்து அதில் இஞ்சி பூண்டு விழுது+எலுமிச்சை சாறு+மிளகாய்த்தூள்+மஞ்சள்தூள்+மிளகுசீரகத்தூள்+உப்பு சேர்த்து கலந்து 1 மனிநேரம் ஊறவிடவும்.


*பின் எண்ணெய் விட்டு 2 பக்கமும் உடையாமல்  முறுகலாக பொரித்தெடுக்கவும்.

 *முட்டை+கடலைமாவு+சிறிது உப்பு சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கலக்கவும்.


*வேறொரு கடாயில் பொரித்த மீன் துண்டுகளை முட்டை கலவையில் நன்கு நனைத்து 2 பக்கமும் வேகவைத்து எடுக்கவும்.மீதமுள்ள முட்டை கலவையை மீனிலேயே ஊற்றி பொரித்தெடுக்கவும்.


*இப்பொழுது பிரியாணிக்கான மீன் ரெடி!!
 *வெங்காயத்தை நீளவாக்கிலும்,பச்சை மிளகாயை கீறியும்,தக்காளியை பொடியாகவும் நறுக்கவும்.தேங்காய் துறுவலை நன்கு மைய அரைக்கவும்.கேரட்டில் பாதியை நறுக்கியும்,மீதியை துருவியும் வைக்கவும்.


*புதினா,கொத்தமல்லியை நறுக்கவும்.நறுக்கிய  வெங்காயத்தில் பாதியும்,கொத்தமல்லியில் பாதியும் எண்ணெயில் பொன்முறுவலாக பொரித்தெடுக்கவும்.எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுக்கவும்.


*அரிசியை 1/2 மணிநேரம் , 1 கப் பால்+ 3 1/2 கப் தண்ணீர் சேர்த்து ஊறவைக்கவும்.


*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+பச்சை மிளகாய்+தக்காளி+நறுக்கிய,துருவிய கேரட்+தக்காளி என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.


*வதங்கிய பின் அரைத்த தேங்காய்+உப்பு+தயிர்+தூள் வகைகள் அனைத்தையும் சேர்த்து வதக்கவும்.


*அனைத்தும் நன்கு சேர்ந்தாற்போல் வரும் போது  எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து 1 கோப்பை அளவு குருமாவை தனியாக எடுத்து வைக்கவும்.


*மீதியுள்ள குருமாவில் அரிசியில் ஊறவைத்த பால்+தன்ணீரை சேர்த்து ஊற்றி நன்கு கலக்கி தேவைப்பட்டால் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.


*குருமா கொதிவரும் போது அரிசியை போட்டு  வேகவிடவும்.


*தண்ணீர் நன்கு வற்றி அரிசி 3/4 பதமாக  வெந்து வரும் போது பாதி அரிசியை எடுத்து தனியாக வைக்கவும்.


*மீதி சாதத்தில் பொரித்த மீன் துண்டுகள்+தனியாக எடுத்துவைத்த குருமா+பொரித்த வெங்காய மல்லித்தழை தூவி விடவும்.


*அதன்மீது எடுத்துவைத்துள்ள மீதி சாதத்தை  போட்டு மீதமுள்ள வெங்காய,மல்லி கலவை+நெய் ஊற்றி விடவும்.


                                          
*அதன்மீது எடுத்துவைத்துள்ள மீதி சாதத்தை  போட்டு மீதமுள்ள வெங்காய,மல்லி கலவை+நெய் ஊற்றி விடவும்.

*190°C  டிகிரிக்கு அவனை முற்சூடு செய்து 20 நிமிடம் வைத்து எடுக்கவும்.

*பரிமாறும் போது சாதம்+மீனை உடையாமல் கிளறி எடுத்து பரிமாறவும்.

பி.கு
*நான் பயன்படுத்தியிருப்பது வஞ்சீர மீன்.மீனை 2 முறை பொரிப்பதால் உடையாமல் இருக்கும்.

*இதற்க்கு அதிகம் முட்கள் இல்லாத மீனைதான் பயன்படுத்த வேண்டும்.வஞ்சீரம்மீன் (நெய் மீன்/அருக்குலா மீன்),கொடுவா மீன்,கடல் சால்மன் மீன்,காக்கை மீன்,விலை  மீன்,பெரிய தேங்காய் பாரை மீன் இவற்றை பயன்படுத்தலாம்.

*கேரட் சேர்ப்பதால் பிரியாணி சுவையாகவும்,கலராகவும்  இருக்கும்.


0 comments:

Post a Comment