தே.பொருட்கள்
அரிசி மாவு - 1/2 கப்
தண்ணீர் - 1 கப்
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்+1 டீஸ்பூன்
உப்பு = தேவைக்கு
தாளிக்க
கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை- சிறிது
தேங்காய்த்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை
*ஒரு பாத்திரத்தில் தண்ணீர்+உப்பு+1/2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கொதிக்கவிடவும்.
*கொதித்ததும் மாவை கட்டியில்லாமல் தூவி கிளறவும்.பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது இறக்கவும்.
*ஆறியதும் சிறு உருண்டைகளாக செய்து ஆவியில் 5 நிமிடம் வேகவிடவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெந்த உருண்டைகள்+தேங்காய்த்துறுவல் சேர்த்து கிளறி இறக்கவும்.
*சூடாக சாப்பிட நன்றாகயிருக்கும்.

0 comments:
Post a Comment