இந்த குழம்பிற்க்கு மஞ்சள் பூசணிக்காய்,சக்கரை வள்ளிக்கிழங்கு,அவரைக்காய்,கேரட்,பீன்ஸ்,வாழைக்காய் சேர்த்து செய்வார்கள்.
தே.பொருட்கள்
வேக வைத்த துவரம் பருப்பு - 3/4 கப்
காய்கள் - 3/4 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
புளிகரைசல் - 1/2 கப்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
எண்ணெயில் வறுத்து பொடிக்க
காய்ந்த மிளகாய் - 4
தனியா - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை
*பாத்திரத்தில் காய்கள் போட்டு முழ்குமளவு நீர் விட்டு உப்பு+மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும்.
*பொடிக்க கொடுத்துள்ளவைகளை நைசாக பொடிக்கவும்.
*காய்கள் வெந்ததும் புளிகரைசல்+பொடித்த பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.
*பச்சை வாசனை அடங்கியதும் வேகவைத்த துவரம்பருப்பை ஊற்றி கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
*வெண்பொங்கலுடன் இந்த குழம்பு சாப்பிட சூப்பர்ர்!!
பி.கு
வெண்பொங்கல் = பச்சரிசி+பால்+உப்பு சேர்த்து பொங்கி செய்யும் பொங்கல்.
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!
0 comments:
Post a Comment