Thursday, February 14, 2013

சிக்கன் உருண்டை குருமா/Chicken Orundai Kurma

தே.பொருட்கள்

சிக்கன் உருண்டைக்கு

எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
பொட்டுக்கடலை மாவு - 1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் -1
பொடியாக நருக்கிய பச்சை மிளகாய் -1
இஞ்சிபூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய புதினா - 1 டீஸ்பூன்
சோம்புத்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 1 டீஸ்பூன்+பொரிக்க தேவையானளவு

செய்முறை

*சிக்கனை சுத்தம் செய்து அரைத்துக் கொள்ளவும்.

*கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம் +பச்சை மிளகாய்+புதினா சேர்த்து வதக்கி ஆறவிடவும்.

*ஒரு பாத்திரத்தில் அரைத்த சிக்க+வதக்கிய வெங்காய கலவை+மேற்கூறிய அனைத்து பொருட்களில் எண்ணெய் தவிர அனைத்தையும் ஒன்றாக கலந்து சிறு உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் பொன்னிறமக பொரித்தெடுக்கவும்.
கிரெவிக்கு

பொடியாக நறுக்கிய வெங்காயம் -1
பொடியாக நறுக்கிய தக்காளி -1
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய புதினா,கொத்தமல்லி - தலா 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க

தேங்காய்த்துறுவல் -2 டேபிள்ஸ்பூன்
கசகசா-1/2 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்

தாளிக்க

பட்டை - 1சிறுதுண்டு
பிரியாணி இலை -2
கிராம்பு -3
ஏலக்காய் -1

செய்முறை

*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+இஞ்சிப்பூண்டு +தக்காளி சேர்த்து வதக்கவும்.
*பின் தூள் வகைகள்+உப்பு+புதினா கொத்தமல்லி சேர்த்து வதக்கி தேவையானளவு நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
*கொதித்ததும் தேங்காய் விழுதை சேர்த்து மேலும் கொதிக்க வைத்து உருண்டைகளை சேர்த்து இறக்கவும்.

0 comments:

Post a Comment