
தே.பொருட்கள்:
மீதமான சாதம் - 2 கப்
புளி - 1 எலுமிச்சை பழளவு
உப்பு +எண்ணெய் =தேவைக்கு
தாளிக்க:கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேப்பிலை - சிறிது
காய்ந்த மிளகாய் - 2
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
கடலைப்பருப்பு - 3/4 டேபிள்ஸ்பூன்
செய்முறை :
*மீதமான சாதத்தில் இரவே புளியை உப்பு கெட்டியாக கரைத்து கிளறி வைக்கவும்.
*மறுநாள்,பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சாதத்தை கொட்டி நன்கு கிளறி இறக்கவும்.
*இதற்கு தொட்டுக்கொள்ள மசால்வடை இருந்தால் போதும் எனக்கு....

0 comments:
Post a Comment