Tuesday, April 12, 2011

பனீர் பிரியாணி / Paneer Biryani

தே.பொருட்கள்

பாஸ்மதி - 2 கப்
பனீர் துண்டுகள் - 1 1/2 கப்
அரிந்த வெங்காயம் - 1
அரிந்த தக்காளி - 1
நெய் - 1 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பட்டை - சிறுதுண்டு
பச்சை மிளகாய் - 5
புதினா,கொத்தமல்லி - தலா 1 கைப்பிடி
இஞ்சி - சிறுதுண்டு
பூண்டு - 4 பல்
சோம்பு - 1 டீஸ்பூன்

தாளிக்க
பிரிஞ்சி இலை - 2
சோம்பு - 1/4 டீஸ்பூன்

செய்முறை
*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைத்து நீரை வடிக்கட்டவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சோம்பு+பிரிஞ்சி இலை போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+அரைத்த விழுது அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*பனீரை நான் ஸ்டிக் கடாயில் எண்ணெய் விட்டு வறுத்து குளிர்ந்த நீரில் 10 நிமிடம் போட்டு நீரை வடிகட்டவும்.

*வதங்கியதும் உப்பு+அரிசி+3 கப் நீர் விட்டு வேகவைக்கவும்.தண்ணீர் சுண்டியதும் பொரித்த பனீரை அதன் மேல் வைத்து 190°C டிகிரி முற்சூடு செய்த அவனில் 15 நிமிடம் வைத்து பனீர் உடையாமல் கிளறி பரிமாறவும்.

0 comments:

Post a Comment