Sunday, April 24, 2011

கானாங்கெழுத்தி மீன் புட்டு / Mackerel Fish puttu


தே.பொருட்கள்

கானாங்கெழுத்தி மீன் - 5
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 பெரியது
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
சோம்புத்தூள் - 1 1/2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1/2 கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை

*மீனை நன்கு சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு முழ்குமளவு நீர்+மஞ்சள்தூள் சேர்த்து நீர்வற்றும் வரை கிளறி வேகவிடவும்.

*ஆறியதும் முள்ளில்லாமல் உதிர்க்கவும்.

*கடாயில் எணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+பச்சைமிளகாய்+மிளகுத்தூள்+சோம்புத்தூள்+மிளகாய்த்தூள்+உப்பு என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*வதங்கியதும் உதிர்த்த மீனை சேர்த்து நன்கு உதிரியாக வரும் வரை கிளறி தேங்காய்த்துறுவல்+கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.

பி.கு

*இதனுடன் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து கட்லட் செய்யலாம்.

0 comments:

Post a Comment