Sunday, April 10, 2011

பனீர் செய்வது எப்படி?? / How To Prepare Paneer??

தே.பொருட்கள்:பால் - 2 லிட்டர்
எலுமிச்சை சாறு - 1/4 கப்

செய்முறை:
*பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சவும்.
*காய்ந்ததும் எலுமிச்சை சாறை ஊற்றவும்.பால் திரிந்துவிடும்,இல்லையெனில் மேலும் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
*மெல்லிய வெள்ளைத்துணியில் ஊற்றி நீரை வடிகட்டவும்.பின் குளிர்ந்த நீரில் நன்கு அலசவும்.
*மூட்டையாக கட்டி 2 மணிநேரம் தொங்கவிடவும்.
*நீரெல்லாம் நன்கு வடிந்த பின் பனீரை வேறொரு துணியில் வைத்து மடித்து,ஒரு தட்டின் மேல் பனீரை வைத்து அதன்மேல் கனமுள்ள பாத்திரத்தில் நீரை ஊற்றி 3 மணிநேரம் வைக்கவும்.

*பனீர் நன்கு செட்டாகியதும் விருப்பமான அளவில் துண்டுகள் போட்டு ப்ரீசரில் வைத்து தேவைப்படும் போது பயன்படுத்தலாம்.

பி.கு:
எலுமிச்சை சாறு சேர்க்கும் போது தயிர் அல்லது ப்ரெஷ் க்ரீம் சேர்த்தால் பனீர் இன்னும் சாப்டாக இருக்கும்.பனீர் வடிகட்டிய நீரை(அதற்க்கு Whey Water என்று பெயர்) வீணாக்காமல்  பிரிட்ஜில் 4 நாட்கள் வரை வைத்திருந்து அடுத்த முறை பனீர் செய்யவும், சப்பாத்தி பிசையும் போது அந்த நீரை ஊற்றி பிசையவும் பயன்படுத்தலாம்

0 comments:

Post a Comment