Tuesday, August 3, 2010

வெஜ் குருமா - 2

தே.பொருட்கள்:
விருப்பமான காய்கறிகள் - 2 கப்
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - 1
தனியாத்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் - 1/2 மூடி
பிரியாணி இலை - 3
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க:
இஞ்சி - 1 சிறுதுண்டு
பூண்டுப்பல் -4
பச்சை மிளகாய் - 3
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் -2
 
செய்முறை:
*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.தேங்காயை துருவி 1 மற்றும் 2ஆம் பால் எடுக்கவும்.

*1ஆம் பால் 1 கப் அளவிலும்,2ஆம் பால் 1 1/2 கப ளவிலும் எடுக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பிரியாணி இலையை போட்டு தாளித்து வெங்காயம்+அரைத்த மசாலா+தக்காளி+தனியாத்தூள்+உப்பு+காய்கறிகள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*நன்றாக வதங்கியதும் 2ஆம் பாலை ஊற்றி காய்களை வேகவிடவும்.காய்கள் நன்கு வெந்ததும் 1ஆம் பாலை ஊற்றி இறக்கவும்.

பி.கு
நான் சேர்த்திருக்கும் காய்கள் கேரட்+பீன்ஸ்+பட்டாணி+உருளைகிழங்கு.

0 comments:

Post a Comment