Friday, August 6, 2010

பதிவுலகில் என்னைப் பற்றி...

இந்த தொடர்பதிவிற்கு என்னை அழைத்த (மாட்டி விட்ட) கவிசிவாவுக்கு மிக்க நன்றி!!!

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
மேனகா.. சத்யா கணவர் பெயர்..

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
இதில் என்ன சந்தேகம்....

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

பாயிஜா அவர்களின் வலைப்பூவில் பின்னூட்டம் இடுவதற்காக வலைப்பதிவில் வலதுகால் வைத்தேன்.அப்போல்லாம் வலைப்பூ பற்றி எதுவும் தெரியாது.பின் ஹர்ஷினி அம்மா அவர்கள் தான் சொன்னாங்க வலைப்பூவில் நமக்கு தெரிந்ததை எழதலாம் என்று.அதிலிருந்து சமையல் குறிப்புகள் எழுத ஆரம்பித்தேன்...

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

தமிழிஷ் மற்றும் தமிழ்மணத்தில் இணைத்தேன்..அவ்வளவுதான்...

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

பெரும்பாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்வதில்லை..மேலும் நான் எழுதுவது சமையல் ப்ளாக் அதனால் கூடவும் இருக்கலாம்...

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

அடப்போங்க ...சம்பாதிக்கிற மாதிரி இருந்திருந்தால் இந்நேரம் கோடீஸ்வரியாகிருப்பேன்...ம்ம் பொழுது போக்கிற்காகதான் எழுதுகிறேன்.அதில் பலர் பயனடைவதில் தனி சந்தோஷம்..

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ம்ம் ஒன்னுதாங்க..இதுவே சமாளிக்க முடியவில்லை.இதுல இன்னோன்னு வேறயா??

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

யார் மீதும் கோபம் வந்ததில்லை.மற்றவர்கள் மீது கோபப்பட நமக்கு என்ன உரிமை இருக்கு...கோபம் வந்ததால் தானே பொறாமைபட வாய்ப்பு வரும்..சோ யார் மீதும் எனக்கு கோபம்+ பொறாமை இல்லை.ஆரம்பத்தில் அதிகம் கோபம் வரும் இப்போல்லாம் போயே போச்சு...

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

முதன்முதலில் பின்னூட்டம் இட்டவர் பாயிஷாவும் , சகோதரர் ஜமால் அவர்களும் தான்...

10. கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

என்னைப் பற்றி பெருசா சொல்ல எதுவுமில்லை.நான் நானாகவே இருக்க விருப்பம்.இந்த பதிவுலகில் முகம் தெரியாத சகோதர சகோதரிகளை பெற்றுள்ளேன்.அதுவே எனக்கு பெரிய சந்தோஷம்.எல்லோரிடமும் அன்பா இருக்கனும்.பொறாமை பட கூடாது.பொறாமை வந்தால் நமக்கு நாமே சூனியம் வைத்துக் கொள்வது மாதிரி..முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவி செய்யனும்..இன்னும் நிறைய இருக்கு.அதெல்லாம் சொன்னால் பதிவு பெருசாகிடும்...

இந்த தொடரை விருப்பமுள்ளவர்கள் தொடரலாம்.....

0 comments:

Post a Comment