Tuesday, August 17, 2010

அரிசி டோக்ளா

தே.பொருட்கள்:

அரிசி - 1 கப்
உளுந்து - 1/4 கப்
மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
சமையல் சோடா - 1/2 டீஸ்பூன்
தயிர் - 1 கப்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு + எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய் - 2
 
செய்முறை :

* அரிசியையும்,உளுந்தையும் தனித்தனியாக 3 மணிநேரம் ஊறவைத்து இட்லிக்கு அரைப்பதுபோல் மைய கெட்டியாக அரைக்கவும்.

*அதனுடன் தயிர்+சமையல் சோடா+உப்பு+எலுமிச்சைசாறு+மஞ்சள்தூள் கலந்து 4 மணிநேரம் புளிக்கவிடவும்.

*பின் அலுமினியம் டிரேயில் மாவை ஊற்றி இட்லிபாத்திரத்தில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

*வெந்ததும் கட்செய்யவும்.அதன்மேல் மிளகாய்த்தூளை தூவிவிடவும்.

*தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து டோக்ளா மீது கொட்டி பறிமாறவும்.

0 comments:

Post a Comment