Wednesday, September 1, 2010

லட்டு

தே.பொருட்கள்:
கடலை மாவு - 2 கப்
சர்க்கரை - 2 கப்
சமையல் சோடா - 1 சிட்டிகை
நெய் - 3 டீஸ்பூன்
நெய்யில் வறுத்த முந்திரி,திராட்சை - தேவைக்கு
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் கலர் - 1 சிட்டிகை
எண்ணெய் - பொரிக்க

செய்முறை :
*கடலை மாவு+சமையல் சோடா இரண்டையும் கலந்து சலிக்கவும்.

*அதனுடன் மஞ்சள் கலர்+1 டீஸ்பூன் நெய் கலந்து தோசை மாவு பதத்திற்க்கு நீர் சேர்த்து கலக்கவும்.கண் கரண்டியில் ஊற்றினால் மாவு விழணும் அதுதான் சரியான பதம்.

*இன்னொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு 3/4 கப் நீர் சேர்த்து பாகு காய்ச்சவும்.2 விரல்களால் தொட்டால் பிசுபிசுப்பாக இருக்கனும்.அதுதான் பூந்திக்கு சரியான பதம்.

*எல்லா மாவையும் கண்கரண்டியில் தோய்த்து பூந்திகளாக பொரித்து வைக்கவும்.

*பூந்தியும்,பாகும் சூடாக இருக்கனும்.அடுப்பை நிறுத்திவிட்டு பூந்தி+ஏலக்காய் பொடி+முந்திரி திராட்சை+மீதமிருக்கும் நெய் சர்க்கரை பாகில் கலந்து மூடி வைக்கவும்.
*சிறிது நேரம் கழித்து பார்த்தால் பூந்தி பொலபொலவென இருக்கும்.இளஞ்சூடாக இருக்கும்போதே நெய் தொட்டு உருண்டைகளாக பிடிக்கவும்.
பி.கு:சர்க்கரை பாகு ஆறிவிட்டால் லட்டு பிடிக்க வராது.

0 comments:

Post a Comment