கடலை மாவு - 2 கப்
சர்க்கரை - 2 கப்
சமையல் சோடா - 1 சிட்டிகை
நெய் - 3 டீஸ்பூன்
நெய்யில் வறுத்த முந்திரி,திராட்சை - தேவைக்கு
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் கலர் - 1 சிட்டிகை
எண்ணெய் - பொரிக்க
செய்முறை :
*கடலை மாவு+சமையல் சோடா இரண்டையும் கலந்து சலிக்கவும்.
*அதனுடன் மஞ்சள் கலர்+1 டீஸ்பூன் நெய் கலந்து தோசை மாவு பதத்திற்க்கு நீர் சேர்த்து கலக்கவும்.கண் கரண்டியில் ஊற்றினால் மாவு விழணும் அதுதான் சரியான பதம்.
*இன்னொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு 3/4 கப் நீர் சேர்த்து பாகு காய்ச்சவும்.2 விரல்களால் தொட்டால் பிசுபிசுப்பாக இருக்கனும்.அதுதான் பூந்திக்கு சரியான பதம்.
*எல்லா மாவையும் கண்கரண்டியில் தோய்த்து பூந்திகளாக பொரித்து வைக்கவும்.
0 comments:
Post a Comment