Tuesday, September 7, 2010

மாங்காய் இஞ்சி குழம்பு

தே.பொருட்கள்:
புளிகரைசல் - 1 1/2 கப்
சாம்பார் பொடி - 1டேபிள்ஸ்பூன்
சாம்பார் வெங்காயம் - 10
நறுக்கிய தக்காளி - 1
பூண்டுப்பல் - 6
உப்பு +நல்லெண்ணெய் = தேவைக்கு

அரைக்க:
நறுக்கிய மாங்காய் இஞ்சி - 1/4 கப்
தேங்காய்த்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்
(மாங்காய் இஞ்சியின் படம்)

தாளிக்க:
வடகம் - 3/4 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
 
செய்முறை:
*அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் மாஞ்காய் இஞ்சியை மட்டும் எண்ணெயில் வதக்கி அதனுடன் தேங்காய் சேர்த்து மைய அரைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+பூண்டு+தக்காளி+சாம்பார்பொடி+உப்பு சேர்த்து நன்கு வதக்கி புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.

*குழம்பு நன்கு கொதித்ததும் அரைத்த இஞ்சி விழுதை சேர்த்து கொதிக்க வைத்து எண்ணெய் பிரியும் போது இறக்கவும்.

ஆயிஷா அவர்கள் கொடுத்த விருது.நன்றி ஆயிஷா!!

0 comments:

Post a Comment