Thursday, October 14, 2010

பாதுஷா

Jasu ப்ளாகில் பார்த்து சில மாறுதலுடன் முதன்முறையாக செய்தது...
தே.பொருட்கள்:
மைதா - 1 1/2 கப்
வெண்ணெய் - 1/2 கப்
சர்க்கரை - 1/4 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க
பாகு செய்ய:
சர்க்கரை - 1/2 கப்
தண்ணீர் - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
குங்குமப்பூ - 1 சிட்டிகை

செய்முறை:
* மைதா+பேக்கிங் சோடாவை கலந்து 2 முறை சலித்துக் கொள்ளவும்.

*ஒரு பவுலில் உருக்கிய வெண்ணெய்+தயிர்+சர்க்கரை அனைத்தையும் ஒன்றாக நன்கு கலக்கவும்.அதனுடன் சிறிது சிறிதாக மைதா மாவை சேர்க்கவும்.

*மாவை மிருதுவாக கெட்டியாக பிசையவும்.இந்த பதமே சரியாக இருக்கும்.தேவைப்பட்டால் மட்டும் சிறிது நீர் தெளித்துக் கெட்டியாக பிசையவும்.
*குறைந்தது 15 நிமிடம் வரை மாவை நன்கு கைகளால் மிருதுவாக பிசையவும்.
*பின் நடுத்தர உருண்டையாக எடுத்து ஒரத்தில் மடித்து விடவும் அல்லது வடைபோல் தட்டில் கட்டை விரலால் குழிபோல் செய்யவும்.
*பானில் எண்ணெயை காயவைக்கவும்.மாவை சிறிது கிள்ளிபோட்டால் மாவு மேலே எழும்பி வரும்போது,எண்ணெய் பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி பாதுஷாக்களைப் போடவும்.
* பாதுஷா மேலே எழம்பி வரும்போது மீண்டும் பானை அடுப்பில் வைத்து சிறுதீயில் வைத்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
*இன்னொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை+தண்ணீர் வைத்து பிசுபிசுப்பு பதம் வரும்போது குங்குமப்பூ+எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.
*பொரித்த பாதுஷாக்களை சூடான சர்க்கரை பாகில் 2 நிமிடங்கள் போட்டு எடுக்கவும்.
*சர்க்கரை பாகு காய்ந்ததும் பரிமாறவும்.

பி.கு:
*செய்த அன்றைக்கு சாப்பிடுவதைவிட மறுநாள் சாப்பிட நன்றாகயிருக்கும்.
*பட்டரின் அளவைக்குறைத்தால் பாதுஷா சரியாக வராது.
*வடிவத்தை அவரவர் விருப்பம்போல் செய்துக்கொள்ளலாம்.சர்க்கரை பாகு மீதமிருந்தால் பாதுஷா போல் ஊற்றி விடவும்,காய்ந்த பிறகு பார்க்கும் போது சர்க்கரை பூத்து அழகாய் இருக்கும்.
*விரும்பினால் இதன்மேல் சாக்லேட் வெரிமிசில்லியை தூவி விடலாம்.

0 comments:

Post a Comment