Monday, October 25, 2010

பருப்பு உருண்டை ரசம்/ Paruppu Urundai Rasam

சாதரணமாக பருப்பு உருண்டைக்குழம்பு தான் செய்வோம்.அதுபோல் உருண்டைகளை ரச்த்தில் போட்டு செய்தால் இன்னும் சூப்பராகயிருக்கும்...
தே.பொருட்கள்:புளி கரைசல் - 1 1/2 கப்
தக்காளி - 2
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
பூண்டுப்பல் - 2
பச்சை மிளகாய் - 1
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
ரசப்பொடி - 3/4 டேபிள்ஸ்பூன்
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:கடுகு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேப்பிலை - சிறிது

உருண்டைக்கு:கடலைப்பருப்பு - 1 கப்
காய்ந்த மிளகாய் - 2
சோம்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
பொடியாக நருக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை:*கடலைப்பருப்பை 1/2 மணிநேரம் ஊறவைத்து அதனுடன் உப்பு+சோம்பு+காய்ந்த மிளகாய்+பெருங்காயம் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

*வெங்காயம்+கொத்தமல்லித்தழையை இதனுடன் கலந்து உருண்டைகளாக ஆவியில் வேகவைத்தெடுக்கவும்.பூண்டு+பச்சை மிளகாயை நசுக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து தக்காளி+மஞ்சள்தூள்+உப்புநசுக்கிய பூண்டு பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கி புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.

*பின் ரசப்பொடியை சேர்த்து கொதிக்கவிட்டு வேகவைத்த உருண்டைகளைப்போட்டு 5 நிமிடம் கழித்து மல்லித்தழை தூவி இறக்கவும்.

0 comments:

Post a Comment