Wednesday, October 20, 2010

இட்லி சாம்பார்/Idli Sambhar

தே.பொருட்கள்:
துவரம்பருப்பு - 3/4 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
சாம்பார் வெங்காயம் - 15
தக்காளி - 1 பெரியது
முருங்கைக்காய் - 1
கத்திரிக்காய் - 2 சிறியது
வெல்லம் - 1 சிறுகட்டி
பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

வறுத்து பொடிக்க:
தனியா - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
சீரகம் - 3/4 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேப்பிலை - சிறிது
 
செய்முறை:
*வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் தேங்காய் தவிர அனைத்தையும் வெறும் கடாயில் வறுத்து தேங்காய் சேர்த்து அரைக்கவும்.

*பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவைக்கவும்.

*காய்களை தேவையானளவு நறுக்கவும்.ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பாதி சாம்பார் வெங்காயம்+நறுக்கிய தக்காளி+காய்கள் அனைத்தையும் நன்றாக வதக்கி வேகவைத்த பருப்புடன் சேர்த்து குக்கரில் 1 விசில் வரை வேகவைக்கவும்.

*அதே கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து மீதமுள்ள வெங்காயம்+அரைத்த விழுது சேர்த்து வதக்கி காயுடன் வேகவைத்த பருப்பை ஊற்றி கொதிக்கவிட்டு கொத்தமல்லித்தழை+வெல்லம் சேர்த்து இறக்கவும்.

0 comments:

Post a Comment