Sunday, October 17, 2010

மைசூர் ரசம்

தே.பொருட்கள்:
துவரம்பருப்பு - 1/4 கப்
தக்காளி - 1 பெரியது
புளி - எலுமிச்சை பழளவு
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
தேங்காய்த்துறுவல் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 1/2+1/4 டீஸ்பூன்

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
நெய் - 1/2 டீஸ்பூன்

எண்ணெயில் வறுத்து பொடிக்க:
தனியா - 1 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
*துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவைக்கவும்.புளியை ஊறவைத்து 1 1/2 கப் அளவில் கரைக்கவும்.

*எண்ணெயில் வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களுடன் தேங்காய் சேர்த்து கரகரப்பாக பொடிக்கவும்.

*பாத்திரத்தில் 1/4 டீஸ்பூன் எண்ணெய் விட்டு துண்டுகளாகிய தக்காளி+சிறிது கொத்தமல்லித்தழை போட்டு நன்கு வதக்கி புளித்தன்ணீர்+உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

*பச்சை வாசனை போனதும் பொடித்த பொடியை தூவி 5 நிமிடத்திற்க்கு பின் வேகவைத்த துவரம்பருப்பை ஊற்றி நுரை வரும் போது கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

*பின் நெய்+1/2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்துக் கொட்டவும்.

0 comments:

Post a Comment