Friday, November 5, 2010

21 காய் சாம்பார்/21 Vegetable Sambhar

இன்று கேதார கௌரி விரதம்.21 காய் போட்டு சாம்பார் செய்து படையல் செய்வாங்க.இந்த சாம்பாரின் சுவையே தனிதான்.
நான் சேர்த்திருக்கும் காய்கள் முருங்கைக்காய்,கத்திரிக்காய்,மாங்காய்,கேரட்,பீன்ஸ்,கோஸ்,பாகற்காய்,
கோவைக்காய்,புடலங்காய்,பீர்க்கங்காய்,சுரைக்காய்,வெள்ளை பூசணிக்காய்,மஞ்சள் பூசணிக்காய்,காலிபிளவர்,பச்சைபட்டாணி,
முருங்கைக்கீரை,உருளைக்கிழங்கு,
சேப்பக்கிழங்கு,வாழைக்காய்,சேனைக்கிழங்கு,வெண்டைக்காய்.அந்தந்த காய்களின் அளவைக் கொஞ்சமாக சேர்க்கவும்.இந்த சாம்பார் கொஞ்சம் நீர்க்க இருந்தால்தான் நன்றாகயிருக்கும்.

தே.பொருட்கள்:வேகவைத்த துவரம்பருப்பு - 1 கப்
புளிகரைசல் - 1/2 கப்
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
21 காய்கள் - தேவைக்கு
நறுக்கிய தக்காளி - 1
சாம்பார் வெங்காயம் - 10
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
காய்ந்த மிளகாய் - 2
 
செய்முறை:*தக்காளி+பச்சை மிளகாய்+காய்கள் முருங்கைக்கீரை+மாங்காய் தவிர எண்ணெய் விட்டு வதக்கிக் வேகவைத்த பருப்புடன் சேர்த்து குக்கரில் 1 விசில் வரை வேகவிடவும்.

*புளிகரைசலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்கவிடவும்.

*பச்சை வாசனை போனதும் வேகவைத்த காய்கள்+உப்பு சேர்த்து மாங்காய்+முருங்கைக்கீரை+சாம்பார் பொடி சேர்க்கவும்.

*மாங்காய் வெந்ததும் தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து சாம்பார் வெங்காயத்தை போட்டு வதக்கி சாம்பாரில் சேர்க்கவும்.

0 comments:

Post a Comment