Thursday, November 18, 2010

பருப்பு உருண்டைக் குழம்பு/ Paruppu Urundai Khuzhampu

தே.பொருட்கள்:புளிகரைசல் - 2 கப்
சின்ன வெங்காயம் - 10
பூண்டுப்பல் - 5
வடகம் - 3/4 டேபிள்ஸ்பூன்
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு +நல்லெண்ணெய் = தேவைக்கு

உருண்டைக்கு:சென்னா - 1 கப்
துவரம்பருப்பு - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 4
சோம்பு - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் -1
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
 
செய்முறை:*சென்னாவை 6 மணிநேஅரமும்,துவரம்பருப்பை 1 மணிநேரமும் ஊறவைத்து உப்பு+காய்ந்த மிளகாய்+சோம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.
*அரைத்த கலவையில் வெங்காயம்+மல்லித்தழை சேர்த்து பிசைந்து உருண்டைகளாக பிடித்து ஆவியில் வேகவைத்தெடுக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வடகம் போட்டு தாளித்து சின்ன வெங்காயம்+பூண்டு சேர்த்து வதக்கி புளிகரைசல்+உப்பு+சாம்பார் பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.
*நன்கு கொதித்ததும் வேகவைத்த உருண்டைகளை சேர்த்து 10 நிமிடம் கழித்து இறக்கவும்.

0 comments:

Post a Comment