Tuesday, November 9, 2010

சீனி அதிரசம்

தே.பொருட்கள்:
பச்சரிசி மாவு - 2 கப்
சர்க்கரை - 3/4 கப்
பால் - 1/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
என்ணெய் - பொரிக்க

செய்முறை:
*பச்சரிசி மாவில் ஏலக்காய்த்தூளை கலந்து வைக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு முழ்குமளவு நீர் வைத்து கொதிக்கவைக்கவும்.கொதிக்க ஆரம்பித்ததும் பாலை ஊற்றவும்.

*சிறிது நேரத்தில் பொங்கும் போது மேலோடு அழுக்கை எடுக்கவும்.

*பின் சிறிது கிண்ணத்தில் நீர் வைத்து சர்க்கரையை அதில் விட்டு பார்த்தால் உருண்டையாக நிற்கும்.

*அப்போழுது பாகை அடுப்பிலிருந்து இறக்கி மாவை கொஞ்சகொஞ்சமாக போட்டு கிளறி நெய் கலந்து வைக்கவும்.
*மறுநாள் ஒரு கவரில் எண்ணெய் தடவி சிறு உருண்டையாக எடுத்து தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
பி.கு:
*பச்சரிசி மாவு என்பது அரிசியை ஊறவைத்து நீரில்லாமல் வடிகட்டி நிழலில் உலர்த்தி மிக்ஸியில் மாவாக்கவும்.

*மிகவும் நைசாக இல்லாமலும்,கொரகொரப்பாக இல்லாமலும் இருக்கனும்.
*நான் குறிப்பிட்டிருக்கும் 2 கப் பச்சரிசி மாவு ஊறவைத்து அரைத்த மாவைதான் குறிப்பிட்டுள்ளேன்.

*மாவை எண்ணெயில் பொரிக்கும் போது தடிமனாக இல்லாமலும்,மெல்லியதாக இல்லாமலும் தட்டவும்.

*மாவு தளர்த்தியாக இருந்தால் மீண்டும் அரிசியை ஊறவைத்து அரைத்து போட்டு கிளறி வைக்கவும்.

*மாவை கிளறி வைத்து உடனே சுடுவதை விட 2 நாள் வைத்திருந்து சுட நல்லாயிருக்கும்.

*இந்த அளவில் 7 அதிரசங்கள் வரும்.

0 comments:

Post a Comment