
வறுத்த பாசிப்பருப்பு மாவு - 1 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - 3/4 கப்
செய்முறை :
*சர்க்கரை முழ்கும் அளவு நீர் விட்டு ஒரு பாத்திரத்தில் ஒற்றை கம்பி பாகு வரும் வரை காய்ச்சவும்.
*இன்னொரு அடுப்பில் சிறு தீயில் நெய்யை சூடாக்கவும்.
*கம்பி பாகு வந்ததும் மாவை கட்டியில்லாமல் தூவி நன்கு கிளறி இறக்கவும்.
*ஒரு கரண்டியால் சூடான நெய்யை மாவில் கொஞ்ச கொஞ்சமாக ஊற்றி நன்கு கெட்டியாகி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது இறக்கவும்.
*உடனே ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தி ஆறிய பிறகு துண்டுகள் போடவும்.
பி.கு:
*கடையில் விற்கும் வறுத்த பாசிப்பருப்பு மாவுதான் உபயோகித்துள்ளேன்.மிகவும் அருமையான சுவையில் இருக்கும் இந்த பர்பி...
*ஒற்றை கம்பி பதம் என்பது 2 விரல்களுக்கிடையே ஒற்றை இழைபோல வரும்.அதுதான் பர்பி செய்ய சரியான பதம்.
* தூளாக வந்த பர்பியை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி லட்டுகளாக பிடித்துவிட்டேன்...

0 comments:
Post a Comment