Saturday, June 26, 2010

செட்டிநாட்டு மட்டன் பிரியாணி

தே.பொருட்கள்:

பாஸ்மதி - 4 கப்
அரிந்த வெங்காயம் - 2
அரிந்த தக்காளி - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
தயிர் - 1/2 கப்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

மட்டனில் வேகவைக்க
மட்டன் - 1/2 கிலோ
வரமிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு

அரைக்க
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 10
சோம்பு - 1 டீஸ்பூன்
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
இஞ்சி - 1 சிறுதுண்டு
புதினா - 1 கைப்பிடி

தாளிக்க:
பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 2
சோம்பு - 1 டீஸ்பூன்

செய்முறை :
* குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு மட்டனில் வேக கொடுத்துள்ள பொருட்களைப்போட்டு சிரிது உப்பு+ 1 1/2 கப் நீர் விட்டு 3 விசில் வரை வேக வைக்கவும்.

*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும்.

*கடாயில் 1 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு அரிசியை 5 நிமிடம் வதக்கி தனியாக வைக்கவும்.வேகவைத்த மட்டனிலிருந்து மட்டனை தனியாகவும்,தண்ணியை அளந்து வைக்கவும்.

*குக்கரில் மீதமுள்ள நெய்+எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயம்+கறிவேப்பிலை+அரைத்த மசாலா+தக்காளி+மட்டன்+தயிர் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*4 கப் அரிசிக்கு 6 கப் தண்ணீர் வைக்கவேண்டும்.மட்டனில் வேகவைத்த நீரின் அளவுடன் மீதி அளவு நீர் விட்டு கொதிக்க விடவும்.உப்பு+புதினா சேர்க்கவும்.

*தண்ணீர் கொதிக்கும் போது அரிசி சேர்த்து ஆவி வந்ததும் வெயிட் போட்டு 10 நிமிடத்தில் இறக்கவும்.

*ஆறியதும் மல்லித்தழை தூவி ராய்த்தாவுடன் பரிமாறவும்.

0 comments:

Post a Comment