Wednesday, June 9, 2010

பைனாப்பிள் சேமியா கேசரி

எனக்கு பைனாப்பிள் போட்டு கேசரி செய்வது ரொம்ப பிடிக்கும்.அதன் வாசனைக்காகவும்,சுவைக்காகவும் ரொம்ப பிடிக்கும்...
 
தே.பொருட்கள்:

சேமியா - 1 கப்
வெந்நீர் - 2 கப்
சர்க்கரை - 3/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
முந்திரி,திராட்சை -தேவைக்கு
பைனாப்பிள் எசன்ஸ் - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பைனாப்பிள் துண்டுகள் - 1/4 கப்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
கேசரி கலர் - 1 சிட்டிகை
 
செய்முறை :
*கடாயில் சிறிது நெய்யில் முந்திரி,திராட்சை மற்றும் பைனாப்பிள் துண்டுகளை வறுத்து தனியாக வைக்கவும்.

*அதே கடாயில் சிறிது நெய் விட்டு சேமியாவை வறுக்கவும்,பின் வெந்நீர் விட்டு வேகவிடவும்.சிறிது நீரில் கேசரிகலரை கரைத்து ஊற்றவும்.

*சேமியா வெந்ததும் சர்க்கரை சேர்த்து நன்கு சுண்டும் வரை கிளறி எசன்ஸ்+ஏலக்காய்த்தூள்+முந்திரி திராட்சை+பைனாப்பிள் துண்டுகள் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
 
பி.கு:
சர்க்கரையின் அளவை அவரவர் தேவைக்கு போடவும்.இந்தளவு சர்க்கரை சரியாக இருக்கும்.சேமியா வேகவில்லையெனில் மேலும் சிறிது வெந்நீர் சேர்த்து வேகவிடவும்.

0 comments:

Post a Comment