Tuesday, July 27, 2010

எம்டி சால்னா

தே.பொருட்கள்:
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - 1
கீறிய பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
புதினா,கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி
சீரகத்தூள்,சோம்புத்தூள் -தலா 1/2 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தனியத்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க:
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
முந்திரி - 5

பொடிக்க:
பட்டை - 1 சிறுதுண்டு
கிராம்பு - 3
ஏலக்காய் - 2
 
செய்முறை :
* அரைக்க மற்றும் பொடிக்க கொடுத்துள்ளவைகளை செய்துக்கொள்ளவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெங்காயம்+பச்சை மிளகாய் + மசாலா பொடி+இஞ்சி பூண்டு விழுது+தக்காளி+தூள் வகைகள்+புதினா கொத்தமல்லி அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.

*பின் உப்பு+தேவையானளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

*நன்கு கொதித்ததும் தேங்காய் விழுது சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும்.

*பரோட்டவுக்கு சூப்பர் மேட்ச்!!
Sending this recipe to Iftar Moments Hijri 1431 Event by Ayeesha & Sidedishes other than dal/subzis Event by Suma.

0 comments:

Post a Comment