Sunday, July 18, 2010

கேழ்வரகு கூழ்

தே.பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 2கப்
நொய்யரிசி - 1/4 கப்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
தயிர் - 1 கப்
உப்பு -தேவைக்கு

செய்முறை:
*கேழ்வரகை மாவை முதல் நாள் இரவே சிறிது நீர் விட்டு தளர்த்தியாக கரைத்து புளிக்க வைக்கவும்.

*மறுநாள் 3 கப் நீரில் ஒரு பாத்திரத்தில் நொய்யரிசியை வேகவைக்கவும்.

*அரிசி வெந்ததும் புளித்த கேழ்வரகு மாவை கரைத்து ஊற்றி கெட்டிபடாமல் நன்கு கிளறிகோண்டே இருக்கவும்.மாவு கையில் ஒட்டாமல் வந்தால் வெந்துவிட்டது என்று அர்த்தம்.

*அப்போழுது இறக்கி ஆறவைக்கவும்.ஆறியதும் மாவை சிறிது நீர்விட்டு உப்பு போட்டு கரைத்து அதன்மேல் தயிரை ஊற்றி வெங்காயத்தை தூவி பருகவும்.

0 comments:

Post a Comment