Thursday, July 15, 2010

ரசமலாய்

தே.பொருட்கள்:

பால் - 8 கப்
எலுமிச்சை சாறு - 1/4 கப்
மைதா - 1 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 8 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
பிஸ்தா பருப்பு - அலங்கரிக்க


செய்முறை :

*4 கப் பாலை நன்கு காய்ச்சி எலுமிச்சை சாறு ஊற்றினால் பால் திரிந்து பனீர் கிடைக்கும்.அதை மெல்லிய துணியில் ஊற்றி வடிகட்டி நன்கு அலசி 6 மணிநேரம் தொங்க விடவும்.

*பனீரை மைதாமாவு சேர்த்து மிருதுவாக பிசைந்து ,உருண்டைகளாகி கையால் லேசாக அழுத்தி தட்டையாக்கி கொள்ளவும்.

*குக்கரில் 4 டேபிள்ஸ்பூன் சர்க்கரை + 1 கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.சர்க்கரை கரைந்ததும் பனீர் உருண்டைகளை அதில் போட்டு 5-7 நிமிடங்கள் வெயிட் போடாமல் வேகவைக்கவும்.

*பனீர் 2 மடங்காக உப்பி வெந்து இருக்கும்.

*வேறொரு பாத்திரத்தில் மீதமிருக்கும் பாலை நன்கு காய்ச்சி,மீதமுள்ள சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

*சர்க்கரை பாகில் இருக்கும் உருண்டைகளை மட்டும் எடுத்தும் கொதிக்கும் பாலில் 5 நிமிடம் போட்டு இறக்கவும்.

*ஏலக்காய்த்தூள் சேர்த்து சில்லென்று பரிமாறும் போது பிஸ்தா பருப்புகளைப் போடவும்.

0 comments:

Post a Comment